தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சஸ்பெண்ட்.. ஆளுநர் ஆர்என் ரவி அதிரடி உத்தரவு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வி திருவள்ளுவன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பிறப்பித்துள்ளார்.
தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக வி திருவள்ளுவன் செயல்பட்டு வருகிறார். இவர் மீது 2021ம் ஆண்டு முதல் இந்த பொறுப்பை வகித்து வருகிறார்.

துணை வேந்தரான வி திருவள்ளுவன் விரைவில் ஓய்வு பெற உள்ளார். அவர் டிசம்பர் மாதம் 12ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதனால் இறுதிக்கட்ட பணிகளில் அவர் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் தான் அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அதாவது தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், துணை பேராசிரியர,உதவி பேராசிரியர்கள் என 40 பணியிடங்களை நிரப்ப லஞ்சம் வாங்கியது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ஆளுநர் ஆர்என் ரவி விளக்கம் கேட்டு இருந்தார்.
இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஆளுநர் ஆர்என் ரவி செயல்பட்டு வருகிறார். இதனால் பணி நியமனம் செய்யப்பட்ட தகுதி இல்லாத 40 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என துணை வேந்தர் வி திருவள்ளுவனிடம் ஆளுநர் ஆர்என் ரவி சார்பில் 2 முறை விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் விளக்கம் என்பது அளிக்கவில்லை.
இதனால் இன்று தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தவர் வி வள்ளுவனை, ஆளுநர் ஆர்என் ரவி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்போது வி திருவள்ளுவன் திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தார்.
இந்த வேளையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications