தஞ்சை நடுக்காவேரி அக்காள் தங்கை.. போலீஸ் ஸ்டேஷன் வாசலில்.. அண்ணனுக்காக உயிரை விட்ட கிருத்திகா
தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த நடுக்காவேரியைச் சேர்ந்தவர் அய்யாவு என்பவருக்கு தினேஷ் என்ற மகனும், துர்க்கா, மேனகா, கீர்த்திகா ஆகிய 3 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக தினேஷை போலீசார் அழைத்து சென்றனர். இதை அறிந்த அவரது தங்கைகள் மேனகா, கீர்த்திகா ஆகியோர் காவல் நிலையம் சென்றனர். அங்கு பொய் வழக்கு போட்டதாக கூறி அக்காள், தங்கை இருவரும் செய்த செயல், மொத்த தஞ்சாவூரையும் அதிர வைத்துள்ளது. உறவினர்கள் கொந்தளித்துபோய் இருக்கிறார்கள்.
காவல் நிலையங்களுக்கு விசாரணைக்காக போலீசார் யாரையாவது அழைத்து சென்றால், அவரது உறவினர்கள் கவலைப்படுவார்கள்.. உண்மையில் அவர் மீது தவறு இல்லை என்று அவர்கள் நினைத்தால், தங்களது உறவினரை காப்பாற்ற காவல் நிலையத்திற்கு செல்வார்கள். அப்படி சென்ற அக்காள் தங்கை, காவல் நிலைய வாசலில் செய்த செயல் பற்றி பார்ப்போம்.

தஞ்சையை அடுத்த நடுக்காவேரியைச் சேர்ந்தவர் அய்யாவு என்பவருக்கு 32 வயதில் தினேஷ் என்ற மகனும், துர்க்கா, மேனகா, கீர்த்திகா ஆகிய 3 மகள்களும் உள்ளனர். இவர்களில் துர்க்காவுக்கு திருமணமாகி விட்டது. என்ஜினீயரிங் பட்டதாரியான கீர்த்திகா அரசு வேலையில் சேருவற்காக படித்து வந்தாராம்.
நேற்று முன்தினம் காலை தினேஷின் மாமா காலமாகிவிட்டார். இதனால் துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக நடுக்காவேரி பஸ் நிறுத்தத்தில் தினேஷ் உறவினர்களுடன் நின்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், ஒரு வழக்கு விசாரணைக்காக வர வேண்டும் எனக்கூறி தினேசை இருசக்கர வாகனத்தில் நடுக்காவேரி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.
காவல் நிலையத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் அழைத்து சென்றதால், தினேசின் உறவினர்களும் நடுக்காவேரி போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அப்போது மேனகா, கீர்த்திகா ஆகியோர் தங்கள் அண்ணன் மீது பொய் வழக்கு போடாமல் அவரை உடனடியாக விட வேண்டும். நாளை (அதாவது நேற்று) மேனகாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டினர் வர இருப்பதாக தெரிவித்தாராம்,
ஆனால் தினேஷ் மீது பொது இடத்தில் கத்தியை காட்டி மிரட்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்ததாக விளக்கம் அளித்தனர். தொடர்ந்து மேனகா, கீர்த்திகா ஆகியோரை திட்டி காவல் நிலையத்தை விட்டு வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த இருவரும் வீட்டிற்கு சென்று எள் பயிருக்கு தெளிக்க வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து வந்து நடுக்காவேரி போலீஸ் நிலையம் முன்பு வைத்து குடித்து உயிரைவிட முயன்றனர்.
இதனையடுத்து சகோதரிகள் இருவரையும் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு நடுக்காவேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு 2 பேரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கீர்த்திகா பரிதாபமாக உயிரிழந்தார். மேனகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கீர்த்திகா உயிரிழந்த சம்பவம் அறிந்த அவரது உறவினர்கள் ஏராளமானோர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு திரண்டனர். பின்னர் கீர்த்திகா மரணத்திற்கு காரணமான போலீஸ் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்றும், புதுக்கோட்டை சிறையில் இருந்து தினேசை விடுவிக்க வேண்டும். அதுவரை கீர்த்திகா உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் தஞ்சாவூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications