கல்யாண வீட்டில் "முடிச்சு.." பாடம் புகட்டுவோம்! ஓபிஎஸ்சுடன் இணைந்த குஷியில் டிடிவி தினகரன் பேச்சு
தஞ்சை: தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க ஓபிஎஸ் உடன் இணைந்துள்ளோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் மகன் சண்முகபிரபு திருமணவிழாவில் பேசிய டிடிவி தினகரன் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியை அமைப்பதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
ஒருங்கிணைப்பாளர் அருமை நண்பர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் நான் பங்கேற்பதில் மகிழ்ச்சி. உறவினர்களோடும் நண்பர்களோடும் இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. 6 ஆண்டுகளுக்கு முன்பு சிலரின் சுயநலப்போக்கினால் நாங்கள் கனத்த இதயத்தோடு பிரிந்து அமமுக கட்சியை தொடங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.

தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதற்காக அமமுக தொடங்கப்பட்டது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதிமுக, அமமுக ஒன்றாக ஒரே குடையின் கீழ் இருப்பது மகிழ்ச்சி. திருமணம் என்றாலே மகிழ்ச்சிதான். இரண்டு மனங்கள் இணையும் திருமண விழாவில் உறவினர்களுடனும் சொந்தங்களுடனும் இணைந்து இந்த திருமண விழாவில் பங்கேற்றுள்ளோம். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த முன்னாள் அமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கத்திற்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
30 ஆண்டு காலமாக ஒற்றுமையாக இருந்த அதிமுக தொண்டர்கள் எல்லாம் இன்றைக்கு ஒரு சிலரின் பேராசையால் பணத்திமிரினால், பேரசையால் பிரிந்திருக்கிறோம். இதனால் அதிமுகவிற்குத்தான் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவதற்காகவும் அம்மா சொன்னது போது அதிமுக எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மக்களுக்கு சேவை செய்வதற்காக செயல்படும். அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக நானும் நண்பர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்துள்ளோம்.
எனக்கும் நண்பர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இருக்கும் நட்பு உங்கள் அனைவருக்கும் தெரியும். ஏதோ விதி வசத்தால் நாங்கள் பிரிய வேண்டியதாகி விட்டது. அரசியலையும் தாண்டி எங்களுக்கு இடையேயான அன்பும் நட்பும் தொடர்ந்தே வந்தது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து தொடர்ந்து கொண்டு செல்வதற்காக அதிமுக உடன் அமமுக கைகோர்த்து செயல்பட தொடங்கி விட்டது. அதற்கு பிள்ளையார்சுழியாக வைத்திலிங்கம் இல்லத்திருமண விழா அமைந்துள்ளது. அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் இங்கு வந்து தங்கள் வீட்டு விஷேசம் போல பங்கேற்றுள்ளனர்.
வரும் காலத்தில் துரோகிகளுக்கு பாடம் புகட்டி, தீய சக்தியான திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றி உண்மையான ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் கொண்டு வர இணைந்து செயல்படுவோம் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications