Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் நெடுஞ்சாலை திட்டங்கள் தாமதம் ஏன்? சட்டென நிதின் கட்கரி சொன்ன பதில்.. மக்கள் ஷாக்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் நிதின் கட்கரி, நெடுஞ்சாலை பணிகள் இங்கு அதிகம் நடக்காமல் இருக்க இதுவே காரணம் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு, ஆந்திரா , கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் புதிய திட்டங்கள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலை பணிகளை ஆய்வு செய்ய ஹெலிகாப்டர் மூலம் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கும்பகோணம் வந்தடைந்தார். அங்கு அவர் தஞ்சாவூர் -கும்பகோணம் - விக்கிரவாண்டி இடையே அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணிகளை ஆய்வு செய்தார்.

nitin gadkari highway

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். சர்வதேச அளவில் வாகன உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருப்பதாகத் தெரிவித்த நிதின் கட்கரி, அதில் இந்தியாவின் பங்கும் மிக முக்கியமானது எனத் தெரிவித்தார்.

நிதின் கட்கரி: இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, "இப்போது சர்வதேச அளவில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் வாகன உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து 3வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இதில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது. இந்தியாவில் வாகன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு.. வாகன உற்பத்தித் துறையில் தமிழகத்தின் பங்கு அளப்பரியது.

விக்கிரவாண்டி - கும்பகோணம் -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணி ஏற்கனவே சுமார் 4 ஆண்டுகள் கால தாமதமாகிவிட்டது. இப்போது பணிகளைத் துரிதப்படுத்தி இருக்கிறோம். அடுத்த மூன்று மாதங்களில் இந்த சாலைப் பணிகள் முழுமையாக முடியும். இதற்கு மேல் இந்த சாலைப் பணிகள் நிச்சயம் தாமதமாகாது.

சிக்கல்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்குச் சாகுபடி நிலங்கள் அதிகம் இருக்கிறது. இதனால் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. இங்கு நெடுஞ்சாலை பணிகள் தாமதமாக இதுவே முக்கிய காரணம். தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால் மேலும் பல சாலை திட்டங்கள் தமிழகத்தில் அமல்படுத்தப்படும்.

விரைவில் தஞ்சாவூர் -அரியலூர் - பெரம்பலூர் நகரங்களை இணைக்கும் புதிய சாலை திட்டத்தை அமைக்க உள்ளோம். இதன் மூலம் சிமெண்ட் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதிகள் எளிதாக வளர்ச்சி அடையும். மேலும், தஞ்சாவூரில் சுற்றுலாத் துறையில் வளர்ச்சி அதிகரிக்கும். தஞ்சாவூரில் புகழ்வாய்ந்த பிரகதீஸ்வரர் கோயில் உள்ள நிலையில், அங்குச் சுற்றுலாத் துறை வேகமாக வளர்ச்சி அடையும்.

3 மாநிலங்களை இணைக்கும் திட்டம்: இப்போது தமிழ்நாடு, ஆந்திரா , கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளோம். குறிப்பாக இங்குள்ள தொழில் நகரங்களை இணைப்பதே முக்கியம். விழுப்புரத்திலிருந்து பெங்களூர் வரை 180 கிலோமீட்டர் தொலைவிற்கு 5400 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழி சாலை அமைக்கப்படும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிரச் சிவகங்கை -தொண்டி - ராமேஸ்வரம் மற்றும் சென்னை -கல்பாக்கம் - மகாபலிபுரம் பகுதிகளை இணைக்கும் திட்டங்களும் உள்ளது.

கர்நாடக தலைநகர் பெங்களூரைச் சுற்றி புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும். இதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகளைப் பொறுத்தவரை நிதி கிடைப்பது பெரிய விஷயம் இல்லை. எளிதாக நிதி கிடைத்துவிடும். ஆனால், சாலைப் பணிகளுக்கு நிலங்கள் கையகப்படுத்துவதில் மிகப் பெரிய காரியம். அதற்குத் தான் அதிக காலதாமதம் ஆகிறது.

தாமதம்: கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் தேசிய நெடுஞ்சாலை பணிகள் என்று வந்துவிட்டால்.. உடனே தேவையான நிலங்களைக் கையகப்படுத்தித் தருகின்றன. இதனால் அங்குச் சாலைப் பணிகள் வேகமாக நடக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்துவதில் சிரமம் இருக்கிறது. இதனால் தான் தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+