எங்க போனாலும் இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல.. ஓபிஎஸ்ஸை சீண்டிய ஆர்பி உதயகுமார்!
தேனி: தேனி மாவட்டம் ஓபிஎஸ்ஸை முதலமைச்சர் ஆக்கியதால் அதிமுக சந்தித்த சோதனைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. எங்கு சென்றாலும் இந்த கொசு தொல்லை தாங்க முடியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசினார்.
மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முதலமைச்சர் ஆக்கியது தேனி மாவட்டம். தேனி மாவட்டம் ஓபிஎஸ்ஸை முதலமைச்சர் ஆக்கியதால் அதிமுக சந்தித்த சோதனைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஓபிஎஸ் தொல்லை தாங்க முடியவில்லை.
நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என எங்கு சென்றாலும் இந்த கொசு தொல்லை தாங்க முடியவில்லை. இங்கு வந்திருக்கும் கூட்டத்தை பார்த்தால் தேனியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் நடத்தும் கூட்டம் ரத்து செய்யப்பட்டால் கூட ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.
நாளை தேர்தல் வைத்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வராக வருவார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று எந்த நேரத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவி ஏற்றாரோ எல்லா விலைவாசியும் ஏறிவிட்டது. மக்கள் வீட்டில் தக்காளி சட்னி கூட வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது" என விமர்சித்தார்.
இதற்கிடையே, இன்று தேனியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி ஓபிஎஸ், டிடிவி தரப்பினர் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications