அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தம்பி ஓ.பாலமுருகன் காலமானார் - தலைவர்கள் இரங்கல்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மூன்றாவது தம்பி பாலமுருகன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அதிமுகவினர், அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பெரியகுளம்: முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பாலமுருகன் பெரியகுளத்தில் உடல் நலக்குறைவினால் இன்று காலமானார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தம்பியின் குடும்பத்தினருக்கு அதிமுக மற்றும் அனைத்து கட்சித்தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பாலமுருகன் புற்று நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று நேற்று இரவு வீடு திரும்பினார். இந்நிலையில், திடீரென்று இன்று காலை உயிரிழந்துள்ளார்.

ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஓ.பாலமுருகன், ஓ.ராஜா, ஓ.சுந்தர் என மூன்று தம்பிகள். ஒரு அண்ணன் இறந்துவிட்டார். மேலும் நான்கு சகோதரிகள் உள்ளனர். இதில் இரண்டாவது தம்பியான ஓ.பாலமுருகன் உடல் நலக்குறைவால் இன்று காலமாகியுள்ளார்.
ஓ.பாலமுருகன் மறைவினை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தம்பியின் குடும்பத்தினருக்கு அதிமுக மற்றும் அனைத்து கட்சித்தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications