விதைக்கப்பட்டார் வடுகபட்டி ஆறுமுகம்.. எல்லையில் தீவிபத்தில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்!
பெரியகுளம்: ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு பணியில் இருந்த போது தீ விபத்தில் வீரமரணமடைந்த தேனி ராணுவ வீரரின் உடல் இன்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் ஆறுமுகம் (38). இவர் 18 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். அண்மையில் ஜம்மு காஷ்மீரில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் நாயக்காக பணிபுரிந்து வந்தார்.
Recommended Video
சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆறுமுகம் தீவிபத்தில் படுகாயமடைந்தார். அவரை ராணுவ மருத்துவமனையில் அனுமதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். விமானம் மூலம் அவரது உடல் வடுகபட்டிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலில் மீது போர்த்தப்பட்ட தேசியக் கொடி அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.
வீரமரணமடைந்த ஆறுமுகத்திற்கு மனைவி பாண்டிராணி (32), 7 வயதில் மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர். ஆறுமுகத்தின் உடலை பார்த்து மனைவியும் ஒன்றும் அறியாத குழந்தைகளும் அழுதது பார்ப்போரை கலங்க வைத்துவிட்டது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications