Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனியில் ஒரே நிமிடத்தில் 20 லட்சம் லாபம்.. வங்கி ஊழியரின் சாமர்த்தியம்.. இறுதியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் மேல்மங்கலம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கருப்பசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே எல்.புதூரை சேர்ந்த ராஜன், மற்றும் கண்னன் ஆகியோரிடம் அரசு வேலை வாங்கி தருவாத ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி ரூ.20½ லட்சம் வரை தந்துள்ளார்கள். இந்த மோசடி தொடர்பாக வேளாண்மைத்துறை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே எல்.புதூரை சேர்ந்த 42 வயதாகும் ராஜன் என்பவருடைய உறவினர் கண்ணன். கண்ணன் தேனி மாவட்டம் மேல்மங்கலம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். அவர் மூலமாக சின்னமனூர் அருகே கரிச்சிப்பட்டியை சேர்ந்த 47 வயதாகும் கருப்பசாமி என்பவர், வாடிப்பட்டி ராஜனுக்கு அறிமுகம் ஆனார். கருப்பசாமி தேனி வேளாண்மைத்துறை அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

Cooperative employee who earned 20 lakhs from 4 women in Theni Twist at the end

13 லட்சம் ஏமாந்தார்

இந்நிலையில், கருப்பசாமி தனக்கு தெரிந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் மூலம் பலருக்கு அரசு வேலை வாங்கித் கொடுத்துள்ளதாக ஆசை வார்த்தை கூறினாராம். பணம் கொடுத்தால் தேனி கலெக்டர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கண்ணன், ராஜன் ஆகியோரிடம் கூறினாராம. அவர் கூறிய ஆசை வார்த்தைகளை இருவரும் அப்படியே நம்பி விட்டனர். இதையடுத்து கண்ணன் தனது மகனுக்கும், ராஜன் தனது மகன் மற்றும் மகளுக்கும் அரசு வேலை பெற முயற்சி செய்தனர். இதற்காக அவர்கள் சேர்ந்து மொத்தம் ரூ.13 லட்சத்தை கருப்பசாமியிடம் கொடுத்துள்ளார்கள்.

20 லட்சம் மோசடி தொடர்பாக வழக்கு

இதுகுறித்து வாடிப்பட்டி ராஜன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து 2 பெண்கள் உள்பட 4 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக கருப்பசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கூட்டுறவு வங்கி ஊழியர்

இந்த வழக்கில் கருப்பசாமியை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு வேலை வாங்கித்தருவதாக யாராவது பணம் கேட்டால் தர வேண்டாம் என்றும், இதுபோன்ற மோசடி நபர்கள் குறித்து காவல்துறையில் புகார் அளித்தால், அவர்கள் மீது போலீசார் உடனே நடவடிக்கை எடுப்பார்கள். அரசு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+