ஓபிஎஸ் மகனை வரவேற்க காத்திருந்த பெண்கள்.. ஆரத்தி வைத்திருந்ததால் காற்றில் மூதாட்டி தலையில் பற்றிய தீ
தேனி: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை வரவேற்க காத்திருந்த போது தலையில் வைத்திருந்த ஆரத்தியில் உள்ள தீ காற்றில் பரவி மூதாட்டியின் தலையில் பற்றியது.
தேனி லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்குகளை சேகரித்த வண்ணம் உள்ளார்.

இந்த நிலையில் அவர் செல்லும் இடங்களிலெல்லாம் பொதுமக்கள் பேண்ட் வாத்தியங்களுடன் ஆரத்தி எடுத்து வருகின்றனர். மேலும் சின்னஞ்சிறிய குழந்தைகளுக்கு பெயர் வைத்தும் வருகிறார்.
தேர்தல் பிரசாரத்துக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வருவதை அறிந்த பெண்கள் ஆரத்தியுடன் அவரை வரவேற்க காத்திருந்தனர். அப்போது காற்றில் தீ அலைபாய்ந்ததால் ஆரத்தியிலிருந்த தீ வேகமாக மூதாட்டியின் தலையில் பற்றியது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் சேர்ந்து மூதாட்டி தலையில் பற்றிய தீயை அணைத்தனர்.












Click it and Unblock the Notifications