நாட்டின் உயர்ந்த கீர்த்தி சக்கரா விருது வென்ற தேனி ராணுவ வீரர்.. நெகிழ வைத்த ஊர் மக்கள்
தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே கீர்த்தி சக்கரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு உள்ளூர் மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் முன்னாள் ராணுவத்தினர் தொழிற்சங்கத்தினர் வானவேடிக்கை தாரை தப்பட்டை முழங்க மலர்மாலை, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு ஆளித்தனர் .
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம். இவர் இந்திய ராணுவத்தில் காஷ்மீர் பகுதியில் 34 ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவில் பணியாற்றி வருகின்றார்.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி தெற்கு காஷ்மீர் பகுதியான குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொழுது ஐந்து தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் லென்ஸ் நாயக் மீனாட்சிசுந்தரம் மீது தீவிரவாதிகள் சுட்டதில் வலது தோள்பட்டை மற்றும் வாய் பகுதியில் துப்பாக்கிகள் குண்டுகள் பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டது.
அந்த நிலையிலும் மீனாட்சி சுந்தரம் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு ஐந்து தீவிரவாதிகளை சுட்டுக்கொன்று தனது குழுவை காப்பாற்றினார்.
இந்த இணையற்ற வீர தீர செயலினை பாராட்டியும் அவரை கவுரவிக்கும் விதமாக இந்திய அரசு கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று கீர்த்தி சக்கரா விருதினை அறிவித்தது.
2026 ஆம் ஆண்டு இந்திய அரசு 7 நபர்களுக்கு கீர்த்தி சக்கர விருது வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டியைச் சேர்ந்த லென்ஸ் நாயக் மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கும் கீர்த்தி சக்கரா விருது வழங்கப்பட்டது.
கடந்த ஜூன் 8 ஆம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரபெளதி மர்மு லென்ஸ் நாயக் மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு கீர்த்தி சக்கரா விருது வழங்கி கௌரவித்தார்.
விருது பெற்ற இராணு வீரர் லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவரது சொந்த கிராமமான கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி கிராமத்திற்கு இன்று பிற்பகல் வருகை புரிந்தார்.
வருகை புரிந்த லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு கிராம மக்கள், உறவினர்கள், நண்பர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஊர் முக்கிய பிரமுகர்கள், பள்ளி குழந்தைகள், என கிராம மக்களை ஒன்று சேர்ந்து தாரை தப்பட்டை முழங்க, வான வேடிக்கைகள் வெடிக்க, மலர் மாலை, பொன்னாடை போர்த்தி கௌரவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இந்திய நாட்டின் உயரிய விருதான கீர்த்தி சக்கரா விருது தன் கிராமத்து ராணுவ வீரருக்கு கிடைத்தது கிராம மக்களிடையே எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'கீர்த்தி சக்கரா' விருது யாருக்குத் தரப்படும்? மத்திய அரசின் சலுகைகள் என்ன?
போர்க்களத்தைத் தாண்டி, அமைதி நிலவும் காலங்களில் அல்லது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பின் போது அசாதாரணமான வீரத்தையும், தியாகத்தையும் காட்டும் ராணுவ வீரர்கள், காவல் துறையினர் மற்றும் குடிமக்களுக்கு வழங்கப்படும் இந்தியாவின் இரண்டாவது உயரிய "அமைதிக்கால வீர விருது" (Peacetime Gallantry Award) இந்த கீர்த்தி சக்கரா ஆகும்.
மத்திய அரசு வழங்கும் முக்கிய சலுகைகள்:
மாதாந்திர உதவித்தொகை: இந்த விருது பெறுபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஆயுட்காலம் வரை மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை (தற்போது ₹9,000 மற்றும் அரசாணைப்படி திருத்தப்பட்ட தொகை) சிறப்புப் படியாக வழங்கப்படுகிறது.
இலவச ரயில் பயணம்
விருது பெற்ற வீரர் மற்றும் அவருடன் பயணிக்கும் ஒருவருக்கு இந்திய ரயில்வேயின் எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் அல்லது ஏசி முதல் வகுப்பு (1st AC) வரை ஆயுள் முழுவதும் இலவசப் பயணச் சலுகை உண்டு.
விமானப் பயணச் சலுகை
ஏர் இந்தியா உள்ளிட்ட உள்நாட்டு விமானப் பயணங்களில் கட்டணச் சலுகைகள் மற்றும் முன்னுரிமைகள் வழங்கப்படுகின்றன.
வருமான வரி விலக்கு
இவர்களுக்கு வழங்கப்படும் இந்தச் சிறப்புப் படிகளுக்கு மத்திய அரசின் வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது.
இதர சலுகைகள்
மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் இவர்களது குழந்தைகளுக்கு முன்னுரிமை இடஒதுக்கீடு மற்றும் தொலைத்தொடர்புச் சலுகைகளும் உண்டு.
-
போர் திறனில் கைதேர்ந்தவர்.. இந்திய ராணுவ தலைமை தளபதியாக தீரஜ் சேத் நியமனம்.. யார் இவர் தெரியுமா? -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?














Click it and Unblock the Notifications