நீட்டை எதிர்த்து ஆசிரியர் பணியை துறந்த சபரிமாலாவின் ஆதரவில் சாதித்த அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார்
தேனி: நீட் நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் அரசு பள்ளிகளில் தமிழக மாணவர் ஜீவித்குமார் முதலிடம் பிடித்துள்ளார். நீட் தேர்வை எதிர்த்து ஆசிரியர் பணியை துறந்த சபரிமாலாவின் ஆதரவில் ஜீவித்குமார் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இது தொடர்பாக பெண்கள் விடுதலை கட்சியின் நிறுவனரான ஆசிரியர் சபரிமாலா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:
3 ஆண்டுகால அவலம்
இப்போது நம்முடன் இருக்கும் சாதனையாளர் மாணவர் ஜீவித்குமார். நீட் அப்படின்னா அரசு பள்ளி மாணவர்களால் சாதிக்க முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கிற காலகட்டத்தில் 3 ஆண்டுகளாக ஒரு மாணவர் கூட நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரிக்குப் போகவில்லை என்கிற நிலை இருந்தது.

அன்பு மகள் அனிதாவுக்கு சத்தியம்
இந்த நிலையில் அன்புமகள் (அரியலூர்) அனிதாவுக்கு நான் சத்தியம் செய்து கொடுத்தேன். கட்டாயம் இந்த இடத்தில் ஒரு அரசுப் பள்ளி பிள்ளையை, கிராமத்து பிள்ளையை நான் படிக்க வைப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டுதான் அரசு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தேன்.

ஜீவித்குமார் தேர்வு
கடந்த 3 ஆண்டுகளாக களத்தில் நிற்கிற சமூக ஆசிரியராக கடந்த ஆண்டு இதே பள்ளியில், இதே நுழைவாயிலில் இதே இடத்தில் மாணவர் ஜீவித்குமாரிடம் கேட்டேன். ஓராண்டு உன்னை படிக்க வைக்க நான் தயார்... நீ என்ன வாக்குறுதி கொடுப்பாய்? என கேட்டேன். 650 மதிப்பெண்களுக்கு மேல் வாங்குவேன் என்று வாக்குறுதியை இந்த இடத்தில்தான் கொடுத்தார்.

சாதித்து காட்டிய ஜீவித்குமார்
ஓராண்டு கோச்சிங் சென்டரில் சேர்த்து படிக்க வைத்தோம். நாமக்கல்லில் தனியார் பயிற்சி மையத்தில் படிக்க வைத்தோம். அவர்கள் சலுகைகள் கொடுத்தார்கள். அமெரிக்காவில் இருந்து ஒரு தோழர் நிதி உதவி செய்தார்கள். ஆசிரியர் அருள்முருகனால் ஜீவித்குமார் அடையாளம்காணப்பட்டார். சிலபஸ் கொடுத்தால் ஜெயித்து காட்டுவேன் என்று சொன்னார் ஜீவித்குமார். இன்று சாதித்து காட்டியிருக்கிறார். இவ்வாறு ஆசிரியர் சபரிமாலா கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications