கல்யாணம் ஆகி 5 நாள்தான் ஆச்சு.. தூக்கில் தொங்கிய 18 வயது புதுப்பெண்.. கம்பம் அருகே சோகம்!
Recommended Video
தேனி: கல்யாணம் ஆகி 5 நாள்தான் ஆனது.. அதற்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் 18 வயது புதுமணப்பெண்!
தேனி மாவட்டம் கம்பம் சுவாமி விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் சேதுபதி. இவருக்கு 22 வயதாகிறது. ஒரு லாட்ஜ் வைத்து அதனை நிர்வகித்து வருகிறார்.

இவருக்கு அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகள் சிவசக்தியை திருமணத்துக்கு பேசி முடித்தனர். இரு வீட்டு சம்மதம்படி, சேதுபதிக்கும், சிவசக்திக்கும் போன 1-ந்தேதி கல்யாணம் ஆனது. சிவசக்திக்கு 18 வயது!
கல்யாணம் ஆகிவிட்டதால், தங்கள் வீட்டின் மாடி போர்ஷனில் புது மனைவியுடன் வாழ்க்கையை ஆரம்பித்தார் சேதுபதி. வீட்டின் கீழ்த்தளத்தில் சேதுபதியின் பெற்றோர் வசிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்து சேதுபதி வெளியே சென்றுவிட்டார். அப்போது, மேல் மாடி ரூமில் சிவசக்தி மட்டும் தனியாக இருந்தார், ரொம்ப நேரமாகியும், சிவசக்தி கீழே வராமல் இருந்ததாக தெரிகிறது. சேதுபதியும் வெளியில் போய்விட்ட நிலையில், மாடியில் இவ்வளவு நேரம் தனியாக என்ன செய்கிறார் என்று சந்தேகப்பட்டு, மாடிக்கு சென்று பார்த்தார் மாமியார் புஷ்பவள்ளி.
அப்போது, ஃபேனின் கொக்கியில் சுடிதார் துப்பட்டாவால் சிவசக்தி தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அலறினார். கதறி அழுததில் அக்கம்பக்கத்தில் ஓடிவந்தனர்.. தொங்கி கொண்டிருந்த சிவசக்தியை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால், சிவசக்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.
இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் எதற்காக தற்கொலை என்பது இன்னும் தெரியவில்லை. கல்யாணம் ஆகி 5 நாட்களே ஆன நிலையில், புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கம்பத்தில் அதிர்ச்சி நிறைந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications