மந்தமான நிலையில் மறு வாக்குப்பதிவு... வெறிச்சோடி கிடக்கும் வாக்குச்சாவடிகள்
தேனி: மறு வாக்குப்பதிவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டாததால், வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி கிடக்கின்றன. சில இடங்களில், இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமானது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இந்தச் சூழலில், தர்மபுரி தொகுதியில் 8 வாக்குச்சாவடிகள், தேனியில் 2 வாக்குச்சாவடிகள், திருவள்ளூர், கடலூர், ஈரோடு தொகுதிகளில் தலா ஒன்று என மொத்தம் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடந்து வருகிறது.

மாதிரி வாக்குப்பதிவு நடத்தும் போது ஓட்டு எந்திரத்தில் பதிவான வாக்குகளை அழிக்காமல் விட்டது. சில தொகுதிகளில் மின்னணு எந்திரத்தில் பதிவான மாதிரி வாக்குகளையும் விவி பேட்டில் உள்ள துண்டு சீட்டையும் அகற்றாமல் தவறு செய்ததன் காரணமாக மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி, 4 தொகுதி இடைத்தேர்தலுடன் 13 வாக்குசாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது. ஆனால், வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. அதே நேரம், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மதியத்திற்கு பிறகு வாக்குப்பதிவு அதிகரிக்க கூடும் என சொல்லப்படுகிறது.
தேனி வடுகபட்டி 197-வது வாக்குச்சாவடியில் வாகுப்பதிவு எந்திரம் பழுதானதால் மறுவாக்குப்பதிவு 20 நிமிடம் தாமதமாக தொடங்கியது. வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications