Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாயார் மறைவால் கலங்கி நின்ற ஓபிஎஸ்.. நள்ளிரவில் வீட்டிற்கே சென்று ஆறுதல் தெரிவித்த சீமான்!

தேனி மாவட்டம் பெரியகுளம் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஓ பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.

Subscribe to Oneindia Tamil

தேனி: ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரத்தை முடித்துக் கொண்டு நேரடியாக தேனி மாவட்டம் பெரியகுளம் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஓ பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (வயது 95). வயது மூப்பின் காரணமாக இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனால் பழனியம்மாளை தேனியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.

பழனியம்மாள் காலமானார்

பழனியம்மாள் காலமானார்

தேனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு பழனியம்மாள் நேற்று முன்தினம் கொண்டு செல்லப்பட்டார். வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார். தாயார் இறந்த தகவல் அறிந்ததும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து பெரியகுளத்துக்கு காரில் புறப்பட்டு வந்தார். நள்ளிரவில் அவர் பெரியகுளத்துக்கு வந்தடைந்தார்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தனது தாயார் உடலை பார்த்து ஓ பன்னீர் செல்வம் கண்கலங்கினார். தாயாரின் கால்களில் முகம் புதைத்து கண்ணீர் விட்டு அழுதார். இதையடுத்து அவருக்கு அங்கிருந்தவர்களும் தேனி மாவட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்களும் தேற்றி ஆறுதல் கூறினர். ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அதேபோல், ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் முதல்வர் தெரிவித்தார்.

 மிகவும் வேதனை அடைகிறேன்

மிகவும் வேதனை அடைகிறேன்

மேலும் முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனை அடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் பன்னீர்செல்வத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியிருந்தார்.

ஓபிஎஸ்க்கு ஆறுதல் கூறிய சீமான்

ஓபிஎஸ்க்கு ஆறுதல் கூறிய சீமான்

ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது , "தாயாரை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்றார். நேற்று மாலையில் பழனியம்மாளின் இறுதி ஊர்வலம் நடந்தது. மயானத்தில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு ஓ.பன்னீர்செல்வம் தீ மூட்டினார். இந்த நிலையில், இரவு பெரிய குளத்தில் உள்ள ஓ பன்னீர் செல்வம் வீட்டிற்கு நேரடியாக சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஓபிஎஸ்சை சந்தித்து ஆறுதல் கூறினார்.

கண்ணீர் வணக்கத்தை செலுத்துகிறேன்

கண்ணீர் வணக்கத்தை செலுத்துகிறேன்

பின்னர் அங்கு வைக்கப்பட்டு இருந்த பழனியம்மாள் படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், "ஓபிஎஸ்சின் தாயார் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். ஈரோடு கிழக்கு பிரசாரத்தை முடித்து விட்டு இங்கு வருகை தந்தேன். ஓபிஎஸ்சை சந்தித்து ஆறுதலாக இருந்து அவருடைய துயரத்தில் நானும் பங்கு கொண்டேன். மதிப்புமிக்க தாயார் பழனியம்மாள் அவர்களுக்கு கண்ணீர் வணக்கத்தை செலுத்துகிறேன்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+