விஜய்யின் அரசியல் எதிர்காலம்.. ஓ பன்னீர்செல்வம் அடித்த ஒன்லைன் பன்ச்
தேனி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இந்தமுறை 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக கட்சிகள் போட்டியிட்டுள்ளனர். அதிமுகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் திமுகவுக்கு மாறியுள்ளனர். விஜய் அரசியல் எதிர்காலம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு கணிப்பை கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும், திமுக நிர்வாகியுமான ஓ. பன்னீர்செல்வம் வாக்களித்தார். அவருடன் அவரின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத்தும் வாக்களித்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், "சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி அனைத்து மக்களும் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது.

தவெக எதிர்காலம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 5 வருடங்கள் நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்கியுள்ளார். அனைத்து மக்களும் மீண்டும் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தின் முதலமைச்சராக மீண்டும் இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் வருவார் என்கிற நம்பிக்கை உள்ளது. தவெக முதல்முறையாக தேர்தலை சந்திக்கவுள்ளது.
வாக்குகள் எண்ணப்பட்டு, அவர்கள் எவ்வளவு வாக்கு பெறுகிறார்கள் என்பதில் அந்தக் கட்சியின் எதிர்காலம் உள்ளது. விஜய் வருகை தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது மக்கள் கையில் உள்ளது. மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது மே 4 ஆம் தேதி தான் தெரியும். எங்கள் மதசார்பற்ற கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மகத்தான வெற்றியை பெறும். தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் நான் உள்பட எங்கள் கூட்டணி வெற்றி பெறும்" என்றார்.












Click it and Unblock the Notifications