தேர்தலில் அரை சதம் அடித்த தேனியின் தோனி.. ஓ.பி.ஆருக்கு கூடும் மவுசு.. புதிய பவர் சென்டர் ஆகிறாரா?
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேனியில் அதிமுக பெற்ற வெற்றி அந்த கட்சிக்கு உற்சாகத்தை தந்துள்ளது.
தேனி: ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேனியில் அதிமுக பெற்ற வெற்றி அந்த கட்சிக்கு உற்சாகத்தை தந்துள்ளது. இதன் மூலம் கட்சிக்குள் எம்பி ஓ. பி ரவீந்திரநாத்தின் புகழ் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கி உள்ளது. தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் 14-ல் திமுக; 13-ல் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 7 மாவட்டங்களின் திமுக சேர்மன் பதவிகளை கைப்பற்றுகிறது ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 5090 இடங்களில் திமுக 2273 , அதிமுக 2071, மற்றவை - 509 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இன்னொரு பக்கம் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 515 இடங்களில் திமுக 263, அதிமுக 235, மற்றவை - 1 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அந்த பக்கம் ஒரு பாட்டி.. இந்த பக்கம் ஒரு பேத்தி.. நடுவுல ரியா.. சபாஷ் மக்களே..இதுதான் அதிரடி மாற்றமோ
தேனி எப்படி
தேனியில் மொத்தமாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு, கோவை, கன்னியாகுமரி, நாமக்கல், தேனி, தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி சேர்மன் பதவிகளை கைப்பற்றியுள்ளது அதிமுக கூட்டணி. தேனியின் வெற்றி அதிமுகவிற்கு உற்சாகத்தை தந்துள்ளது.
எத்தனை கவுன்சிலர்
தேனியில் உள்ள 98 ஒன்றிய கவுன்சிலர் தொகுதிகளில் அதிமுக 50 இடங்களை அடித்து தூக்கி வென்றுள்ளது. தேனியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 3 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை வென்றுள்ளது. திமுக 41 இடங்களை வென்றுள்ளது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த ஒன்றியத்தில் மடடும் அதிமுகவை திமுக முந்தியுள்ளது.
ஆதிக்கம்
மற்றபடி தேனி முழுக்க அதிமுகதான் ஆதிக்கம் செலுத்தி உள்ளது. தமிழகத்திலேயே அதிமுகவிற்கு அதிக அளவில் வாக்குகள் கிடைத்த மாவட்டங்களில் ஒன்றாக தேனி உருவெடுத்துள்ளது. இதன் மூலம் அதிமுகவில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பெரிய அளவில் கொண்டாட்டத்தில் குதித்துள்ளனர்.
82 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்... பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்தது தேமுதிக
லோக்சபா தேர்தல்
கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கட்சி தேனியில் மட்டும்தான் வென்றது. தமிழகம் முழுக்க அதிமுக கூட்டணி போட்டியிட்டாலும், தேனியில் மட்டும்தான் ஓ.பிரவீந்திரநாத் வெல்ல முடிந்தது. அப்போதே அதிமுகவில் கொஞ்சம் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கை ஓங்கியது.
மீண்டும் வருகிறார்
தற்போது உள்ளாட்சி தேர்தலிலும் தேனியில் அதிமுக சிறப்பாக களமாடி உள்ளது. இதனால் கட்சிக்குள் மீண்டும் ஓ .பி.எஸ் லைம் லைட்டிற்கு திரும்ப வாய்ப்புள்ளது என்கிறார்கள். மிக முக்கியமாக எம்பி ஓ.பி. ரவீந்திரநாத் நியமித்த நிர்வாகிகள் மிக சிறப்பாக பணியாற்றி உள்ளனர். லோக்சபா தேர்தலில் ஸ்டைலில் ஓ.பி.ஆர் உள்ளாட்சி தேர்தலிலும் சிறப்பாக செயலாற்றி உள்ளார்.
பவர் சென்டர்
இதனால் அதிமுக புதிய பவர் சென்டராக ஓ.பி.ஆர் உருவெடுக்கிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே எம்பியாக இருப்பதால் டெல்லியில் ஓ. பி ரவீந்திரநாத் பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளது. டெல்லியில் அதிமுகவின் ஒரே முகமாக இவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.