ஆணவமாக பேசினாரு ஓபிஎஸ் மகன்...அதனால தேனியில் நின்றேன்...தங்க தமிழ் செல்வன்
தேனி: தேனியில் அமமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முதல் நாள், ஓபிஎஸ் மகன் ஆணவமாக பேசினார். அதனால் தேனி தொகுதியில் எம்பி வேட்பாளராக நானே நிற்க வேண்டும் என முடிவு செய்தேன் என தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் மகன் ஓ.ப. ரவீந்திர நாத்தும், திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அமமுக சார்பில் தங்க தமிழ் செல்வனும் களத்தில் இருக்கிறார்கள்.
ஆண்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த தங்க தமிழ் செல்வன், தினகரனுக்கு ஆதரவு அளித்ததோடு, முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் 18 எம்எல்ஏக்களில் ஒருவராக புகார் மனு அளித்தார். இதையடுத்து தங்க தமிழ் செல்வனுடன் சேர்ந்து 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

தேனியில் போட்டி
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வததின் மகன் ப.ரவீந்திர நாத் குமார் அறிவிக்கப்பட்டார். அப்போது தினகரன், தேனியில் அமமுக சார்பில் தேவைப்பட்டால் நானே நிற்பேன் என கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அமமுக வேட்பாளர்
இந்நிலையில் அமமுக சார்பில் ஆண்டிபட்டி தொகுதி எம்எல்ஏவாக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட தங்க தமிழ் செல்வன், அக்கட்சியின் சார்பில் தேனி மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் பலரும் ஆச்சர்யம் அடைந்தனர்.

தேனியில் போட்டி
தங்க தமிழ் செல்வன் ஆண்டிபட்டியை விட்டுவிட்டு தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று, இதனை அவரிடம் நேராகவே கேட்டது. அதற்கு பதில் அளித்த தங்க தமிழ் செல்வன், "சட்டமன்ற தேர்தலில் நிற்க வேண்டும் என்று சொன்னேன். கடைசி நேரத்தில் மக்களை தேர்தலில் நிற்க வேண்டும் என்ற நிலை வந்தது, அதற்கு நான் ஒப்புக்கொண்டேன்.

ஓபிஎஸ் மகன்
அதன் பின்னணி என்று சொன்னால், தேனியில் நிற்கும் ஓபிஎஸ் மகன் ஆணவமான பேச்சு பேசினார். 'ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எனக்கு பெரிதல்ல. அவர் (தினகரன்) சுயேட்டை சின்னத்தில் நிற்கிறவர், அதெல்லாம் பொருட்டே கிடையாது. எத்தனையோ பேர் இங்கு தோற்றுள்ளார்கள். நான் பாஜக கூட்டணியில் இங்கு நிச்சயம் ஜெயித்துடுவேன். என்கிட்ட எல்லா பலமும் இருக்கிறது' என்கின்ற ஒரு ஆணவமான பேச்சை தேர்வு செய்வதற்கு முதல் நாள் நான் கேட்டேன்.

முடிவு செய்தேன்
இதனால் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட வேண்டும் என நானே முடிவு செய்தேன். என் முடிவினை டிடிவி தினகரன் ஏற்றுக்கொண்டார். ஆண்டிபட்டியை விட்டுவிட்டு தேனியில் போட்டியிடுவதால் எந்த பின்னடைவும் இல்லை. எங்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தான். அதிமு க போட்டியில் இல்லை" என்றார். மேலும் அதிமுக ரூ.5000 வரை ஓட்டுக்கு கொடுப்பதாகவும் தங்க தமிழ் செல்வன் குற்றம்சாட்டினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications