இறந்தவருக்கு பால் ஊற்ற போனபோது.. சூழ்ந்து தாக்கிய தேனீக்கள்.. விஷம் ஏறி ஒருவர் பலி.. 20 பேர் காயம்
தேனி: தேனி அருகே இறந்தவருக்கு பால் தெளிக்கும் சடங்கு செய்வதற்காக மயானத்திற்கு சென்றவர்களை தேனீக்கள் தாக்கியுள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
Recommended Video

இந்த சம்பவத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் தேனி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. 73 வயதான இவர், உடல் நலக்குறைவால் சனிக்கிழமை இயற்கை எய்தினார்.

மயானம்
அதனைத் தொடர்ந்து நேற்று அவரது உடல் கோடாங்கிபட்டியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இறந்த சீதாலட்சுமிக்கு பால் தெளிக்கும் சடங்கு செய்வதற்காக இன்று காலை உறவினர்கள் மயானத்திற்கு சென்றுள்ளனர்.

பால் ஊற்ற சென்றனர்
அப்போது மயானத்தில் இருந்த தேன்கூட்டில் இருந்து படையெடுத்த ராட்சத தேனீக்கள் அங்கிருந்தவர்களை தாக்கியது. தேனீக்கள் தாக்கியதில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் இறந்த சீதாலட்சுமியின் சகோதரி மகனான பெயின்டர் வேலை பார்த்து வந்த ராஜா (40) என்பவர் மேல் சட்டை இல்லாமல் இருந்ததன் காரணமாக நூற்றுக்கணக்கான தேனீக்கள் அவரை சூழ்ந்து கடுமையாகத் தாக்கியது.

சகோதரி மகன் பலி
தேனீக்கள் படையெடுத்ததன் காரணமாக அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடத் துவங்கினர். இதில் காயமடைந்த அனைவரையும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரும் சோகம்
சனிக்கிழமை இறந்தவருக்கு சடங்கு சம்பிரதாயம் செய்ய சென்றவர்களை இன்று தேனீக்கள் தாக்கியதால், ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications