தேனி தொகுதியில் ''உங்களுடன் நான்'' செயலி அறிமுகம்...! ஓ.பி.எஸ்.மகனின் புது முயற்சி
Recommended Video

தேனி: பெரியகுளத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ''உங்களுடன் நான்'' என்ற செயலியை வெளியிட்டார்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் அதிமுக தோல்வியடைந்த நிலையில், தேனியில் மட்டும் வெற்றிபெற்றது. காரணம் அங்கு போட்டியிட்டது அதிமுக ஒருங்கிணைப்பாளர் மகன் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத். அவருக்காக அப்போது தேர்தல் பணியாற்ற தென் மாவட்டங்களை சேர்ந்த பல நிர்வாகிகள் சொந்த தொகுதிகளை விட்டுவிட்டு தேனியில் முகாமிட்டனர்.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியூர் நபர் எனக் கூறி தொகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார் ஓ.பி.ரவீந்தரநாத். அப்போது அவரை சந்தித்த இளைஞர்கள் சிலர், நீங்க வெற்றிபெற்றால் மட்டும் என்ன செய்யப்போகிறீர்கள், உங்களையும் நாங்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலைதான் ஏற்படும் எனத் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த ஓ.பி.ரவீந்தரநாத், 24 மணி நேரமும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும், மற்ற எம்.பி.க்களுக்கு முன்மாதிரியாக திகழ்வேன் எனவும் வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், அதனை நிறைவேற்றும் வகையில் பெரியகுளத்தில் உள்ள தனது சொந்த கட்டிடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்த ரவீந்தரநாத் குமார் எம்.பி., தொகுதி மக்கள் தன்னை வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் 'உங்களுடன் நான்'' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளார். மேலும், நாம் ஏற்கனவே கூறியிருந்தது போல், தனது அலுவலகத்தை ஹை டெக்காக மாற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜக்கையன், மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications