பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள்.. கண்மூடி திறப்பதற்குள் நடந்த கொடூரம்! கேரள இளைஞர் கைது
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பஸ்சுக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் 3 பேர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஜித் குமார் என்ற கேரளாவை சேர்ந்த இளைஞர் தாறுமாறாக ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி விட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே க. விலக்கு பேருந்து நிலையத்தில் நேற்று பயணிகள் சில பஸ்சிற்காக காத்து நின்றனர். அப்போது கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த அஜித் குமார் என்ற 28 வயது வாலிபர், காரில் தேனியில் இருந்து வந்துகொண்டிருந்தார்.

இடித்து தள்ளிய கார்
அப்போது திடீரென அவரது கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் சாலையில் தாறுமாறாக ஓடிய கார் செண்டர்மீடியனை இடித்து தள்ளியபடி சீறிப்பாய்ந்து வந்தது. இறுதியில் க.விலக்கு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீதும் மோதி இடித்து தள்ளியபடி சென்றது. இந்த விபத்தில் பஸ்சுக்காக காத்து நின்ற 4 பயணிகள் படுகாயமடைந்தனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை அங்கிருந்தவர்கள் மற்றும் தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கண்டமனூர் வேலாயுதபுரத்தை சேர்ந்த பால்ராஜ் (வயது 75), தங்கப்பாண்டி மனைவி செல்வம் (50), ஏரதிமக்காள் பட்டியை சேர்ந்த மாரியம்மாள் (60) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
கேரள இளைஞர் கைது
அரசரியை சேர்ந்த பாக்கியலட்சுமி (39) என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரை அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக அஜித்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் கார் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications