தேனி, பொள்ளாச்சியில் தமிழ்நாட்டின் இரண்டு ‘பொறியியல்' அதிசயம்.. கேரளாவால் மறக்க முடியாதது
தேனி: இயற்கையின் விதியை மனிதனின் பேரறிவு வென்ற கதை அது! இயற்கையாகவே கேரளாவுக்குச் சென்று, அங்குள்ள ஆறுகள் வழியாக அரபிக்கடலில் வீணாகக் கலக்க வேண்டிய தண்ணீரை, தங்களின் அசாத்திய பொறியியல் புத்திசாலித்தனத்தால் தமிழகத்தின் வறண்ட பூமியை நோக்கிக் கொண்டு வந்த இரண்டு பிரம்மாண்ட காவியங்கள் தான் - பொள்ளாச்சி பி.ஏ.பி (PAP) கால்வாயும், தேனி முல்லைப் பெரியாறும்! 'இயற்கை அதிசயம்' என்று நம்மைக் வியக்க வைக்கும் இந்த இரண்டு திட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் நெஞ்சை உலுக்கும் பொறியியல் ரகசியங்கள் என்னென்ன?
பொள்ளாச்சி PAP: காமராஜர் தந்த கொடை
கோவை - பொள்ளாச்சி அடர்ந்த காடுகளுக்குள் பாயும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் என்பது வெறும் தண்ணீர் செல்லும் கால்வாய் அல்ல; அது புவிஈர்ப்பு விசையின் உச்சக்கட்ட விளையாட்டு. 1960-களில் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காகப் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய உன்னதமான திட்டம் இது. பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளைத் தொட்டுச் செல்லும் இந்தக் கால்வாய் முற்றிலும் இயற்கையான புவிஈர்ப்பு விசையை மட்டுமே பயன்படுத்தி, மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப் பாதைகள் வழியாகத் தானாகவே ஓடிவரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் வெவ்வேறு உயரங்களில் பாயும் 7 ஆறுகளையும், நல்லாறு, ஆழியாறு போன்ற அணைகளையும் இணைப்பது சாதாரண விஷயமல்ல.
இதன் ஆகச்சிறந்த அதிசயம் என்னவென்றால், தண்ணீரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பம்புகளை வைத்து இறைக்காமல், மலையின் உயரத்தையும் நிலத்தின் சரிவையும் துல்லியமாகக் கணக்கிட்டு, முற்றிலும் இயற்கையான புவிஈர்ப்பு விசையை மட்டுமே பயன்படுத்தித் தண்ணீர் ஒரு அணையிலிருந்து அடுத்த அணைக்குத் தானாகவே ஓடிவரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அடர்ந்த காட்டுக்குள், செங்குத்தான மலைப்பாறைகளைத் துளைத்து, பல கிலோமீட்டர் தூரத்திற்கு மனிதர்கள் உருவாக்கிய 'சுரங்கப் பாதைகள்' வழியாக இந்தத் தண்ணீர் பாய்கிறது.
ஆனால், இது ஏன் ஆபத்தானது? இங்குக் கால்வாய்களில் தண்ணீர் மிக அதிவேகமாகப் பாயும். சில இடங்களில் தண்ணீர் திடீரென பூமிக்கு அடியில் இருக்கும் ராட்சதக் தலைகீழ் குழாய்களுக்குள் சென்று, மலையின் மறுபுறம் வெளியேறும். காடுகளுக்குள் இதன் ஆழமும், நீரோட்டத்தின் வேகமும் தெரியாமல் இறங்குபவர்களை இந்த நீர்ச்சுழல் அப்படியே உள்ளே இழுத்துச் சென்றுவிடும்.
இந்தக் கால்வாயின் கரைகள் அனைத்தும் செங்குத்தாக வெட்டப்பட்டது போல் இருக்கும்; உள்ளே இறங்குவதற்கோ அல்லது தவறி விழுந்தால் மேலே ஏறுவதற்கோ எந்தவொரு படியோ, சரிவோ கிடையாது. தண்ணீரும் ஆற்று வெள்ளம் போல் மிக அதிவேகமாகப் பாயும். இதனால், காடுகளுக்குள் இதன் ஆபத்து தெரியாமல் குளிக்கச் செல்லும் மனிதர்கள் பலியாகியும் வந்துள்ளார்கள.
ஒரு முறை கேரளாவில் மிகவும் பிரபலமான 'சில்லிக்கொம்பன்' என்ற காட்டு யானை இந்தக் கால்வாயில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. மற்றொரு யானையுடன் நடந்த சண்டையில் அடிபட்டு சோர்வாக இருந்த அந்த யானை, தாகம் தணிக்கக் கால்வாயில் இறங்கியுள்ளது. ஆனால், செங்குத்தான கரை அமைப்பால் அதனால் மேலே ஏற முடியாமல், தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு அங்கேயே மூச்சுத்திணறி இறந்து போனது.
முல்லைப் பெரியாறு: நதியின் திசையையே மாற்றிய பென்னிகுவிக்கின் அற்புதம்!
அடுத்தது, உலகப் பொறியியல் வரலாற்றின் பிதாமகன் ஜான் பென்னிகுவிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை. இயற்கையின் விதிப்படி, மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் கேரளா நோக்கிப் பாய்ந்து கடலில் கலந்தது. ஆனால் கிழக்கே பிறந்து மேற்கே போக வேண்டிய நதியை மீண்டும் கிழக்கே கொண்டு வந்து பொறியியல் அதிசயத்தை நிகழ்த்தினார் பென்னிகுவிக், "மேற்கே பாயும் நதியை, கிழக்கு நோக்கித் திருப்பி" வைகை வடிநிலத்திற்கு (மதுரை, இராமநாதபுரம்) கொண்டு வந்தார்.
அணையில் தேக்கப்படும் தண்ணீரைத் தமிழகப் பகுதிக்குக் கொண்டு வர, மலைக்கு நடுவே 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு பிரம்மாண்ட சுரங்கப் பாதையைக் குடைந்து உருவாக்கினார். 130 ஆண்டுகளைக் கடந்தும் இந்த அணை கம்பீரமாக நிற்பதற்கு அதன் கட்டுமானப் பொறியியல் தான் காரணம். இன்று நாம் பயன்படுத்தும் சிமெண்ட் அப்போது கிடையாது. கருங்கற்கள், சுருக்கி (சுடப்பட்ட செங்கல் பொடி), சுண்ணாம்பு, மற்றும் கரும்பு வெல்லச்சாறு ஆகியவற்றைத் துல்லியமான விகிதத்தில் கலந்து இந்த அணை கட்டப்பட்டது. இது தண்ணீரை உள்வாங்க உள்வாங்க மேலும் இறுகிப் பாறையாக மாறும் தன்மை கொண்டது.
கேரளாவுக்குச் செல்ல வேண்டிய தண்ணீரைத் திருப்பி, மலைகளின் சரிவைப் பயன்படுத்தித் தானாக ஓட வைத்தது பி.ஏ.பி அற்புதம்; இயற்கையாக ஓடிய நதியின் திசையையே எதிர்த்துத் திருப்பி, வறண்ட பூமிக்குக் கொண்டு வந்தது முல்லைப் பெரியாறு அற்புதம்! இரண்டுமே தமிழ்நாடு இயற்கையோடு நிகழ்த்திய பிரம்மாண்ட விஷயம் ஆகும்.இரண்டுமே கேரளாவால் மறக்க முடியாதது ஆகும்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்














Click it and Unblock the Notifications