விசுவாசம் இருந்தால் அதிமுகவில் உயர்பதவிக்கு வரலாம்… தி.மு.க- வில் சாத்தியமில்லை.. ஓ.பி.எஸ் பேச்சு
தேனி: அதிமுகவை எந்த கொம்பாதி, கொம்பனாலும் வீழ்த்த முடியாது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், ஆண்டிபட்டி தொகுதி அதிமுக வேட்பாளார் லோகிராஜன் ஆகியோரை ஆதரித்து, ஆண்டிபட்டியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக என்பது மிகப்பெரிய ஆலமரம், பூகம்பமே ஏற்பட்டாலும் யாராலும் அதனை அசைக்கமுடியாது என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலோடு, அதிமுக காணாமல் போய்விடும் என ஸ்டாலின் கூறுவது ஒருபோதும் நடக்காது என்றும் பேசினார். திமுக வன்முறை கலாச்சாரத்தை கொண்டுள்ள கட்சி என விமர்சித்த ஓ. பன்னீர்செல்வம், தேனி தொகுதியில் அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சராக முடியாத பொறாமையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அ.தி.மு.க-வை குறைகூறி பேசி வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். அடிமட்ட தொண்டன் உயர் பதவிக்கு வருவது தி.மு.கவில் சாத்தியமில்லை எனக் கூறினார். ஆனால், அ.தி.மு.கவில் விசுவாசம் மிக்க தொண்டர்கள், உயர் பதவிக்கு வரமுடியும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதிமுக நீட்டை எதிர்க்கவில்லை.. எதிர்த்தால் சமாதானம் செய்வோம்.. பியூஷ் கோயல் பகீர் பேட்டி!
அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறிய ஓ. பன்னீர்செல்வம், மேலும், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கிறோமா? இல்லையா? என்பதை அவர், தெய்வமாக இருந்து பார்த்து வருவதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.