Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனியில் மொத்த குடும்பத்திற்கும் எமனாகிய ஒரே ஒரு தீக்குச்சி.. விளையாட்டுக்கு கூட இப்படி செய்யாதீங்க

Subscribe to Oneindia Tamil

தேனி: யாரும் விளையாட்டுக்கு கூட பெட்ரோல் கேனை தொடக்கூடாது. பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு விளையாட்டுத்தனமாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்களை மிரட்டி பார்க்கலாம் என்று நினைத்தே தீக்குச்சியை உரச வேண்டாம்.. சிலர் விளையாட்டாக பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, தீக்குச்சியை எடுத்துக்கொண்டு மிரட்டுகிறார்கள். அப்படித்தான் தேனி அருகே கடமலைக்குண்டுவில் ஒருவர் செய்தார். அது மொத்த குடும்பத்தையும் பாதித்துள்ளது.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள நரியூத்து கிராமத்தை சேர்ந்த 44 வயதாகும் மாரிமுத்து ஓட்டல் கடையில் பணியாற்றும் தொழிலாளியாவார். இவரது மனைவி மீனா (36). இந்த தம்பதிக்கு அக்சயா (8), அபிநயா (4) என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதேபோல் நேற்று தம்பதி இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாரிமுத்து திடீரென வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றியிருக்கிறார்

What happened to the person who poured petrol on himself in Theni Please don t do this

பின்னர் மனைவியிடம் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். அப்போது தீக்குச்சியை பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக மாரிமுத்து மீது தீப்பற்றியது. அப்போது அருகே இருந்த மீனா, 2 குழந்தைகள் மீதும் தீ பரவியது. இதனால் 4 பேரும் வலியால் அலறியுள்ளனர். இதற்கிடையே சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில் மாரிமுத்துவும், மீனாவும் படுகாயமடைந்தனர். இதேபோல் 2 குழந்தைகளும் காயமடைந்தனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாரிமுத்து 80 சதவீத தீக்காயங்களுடனும், மீனா 60 சதவீத தீக்காயத்துடனும் உயிருக்கு போராடி வருகிறார்கள். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுவாக தீக்காயங்கள் 40 சதவீதத்திற்கு மேல் இருந்தாலே நிலைமை சிக்கலாகும்.அந்த வகையில்60 சதவீதம் தீக்காயத்துடன் உள்ள மீனாவும், 80 சதவீத தீக்காயத்துடன் உள்ள மாரிமுத்துவும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். பெட்ரோல் ஊற்றிய பின்னர், விளையாட்டுக்கு கூட தீக்குச்சியை எடுக்கவே கூடாது. என்ன சண்டை என்றாலும் உடலில் பெட்ரோலை ஊற்றக்கூடாது.

சிலர் விளையாட்டாக மிரட்ட நினைத்து பெட்ரோலை சிறிய அளவில் ஊற்றி, தீக்குச்சியை உரசுவதுபோல் பாவலா செய்வார்கள்.. அப்படி செய்த அடுத்த சில நொடிகளில் தீ குப்பென்று பிடித்துவிடும். அப்படி விளையாட்டாக தீக்குச்சியை பற்ற வைத்து அழிந்தவர்கள் உண்டு. எனவே தயவு செய்து எந்த காரணம் கொண்டு உடலில் பெட்ரோலை ஊற்ற வேண்டாம். தீக்குச்சிகளை வைத்து விளையாட வேண்டாம். அது உங்களை மட்டுமல்ல உங்கள் குடும்பத்தையும் மோசமாக பாதிக்கும்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+