Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனி அருகே மலைப்பகுதியில் தறிகெட்டு ஓடிய அரசு பேருந்து.. ஒரு நொடியில் முடிந்த மாணவியின் வாழ்க்கை

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள இடுக்கி ஏராளமான சுற்றுலா தலங்களை கொண்ட கேரளாவின் மலைப்பகுதி மாவட்டம் ஆகும். இங்குள்ள கட்டப்பனையில் இருந்து எர்ணாகுளம் நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தார்கள். அரசு பேருந்து கட்டப்பனை-எர்ணாகுளம் சாலையில், இடுக்கி அருகே மணியப்பாறையில் சென்ற போது யாருமே எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது.

தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ஏராளமான சுற்றுலா தலங்களை கொண்ட மலை மாவட்டம் ஆகும். அங்கு தேக்கடி, மூணாறு, வாகமன் உள்பட ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. தேயிலை தோட்டங்களும், அடர்ந்த வனப்பகுதிகளும் அமைந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தை போல் எப்போது குளுகுளுவன கால நிலை கொண்ட இடுக்கி மாவட்டத்தில் ஏராளமான ஊர்கள் உள்ளன. அதில் கட்டப்பனை முக்கியமான நகரமாகும்.. இங்கிருந்து கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் செல்கின்றன.

What happened to the student when the government bus ran into a mountain near Theni

அந்த வகையில் கட்டப்பனையில் இருந்து எர்ணாகுளம் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த அரசு பஸ்சில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பஸ்சை சிஜூ (வயது 45) என்பவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். கட்டப்பனை-எர்ணாகுளம் சாலையில், இடுக்கி அருகே நேரியமங்கலத்தை அடுத்த மணியப்பாறையில் பஸ் வந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறிகெட்டு ஓடத்தொடங்கியது.

ஒரு கட்டத்தில், அந்த அரசு பஸ் சாலையோரம் இருந்த 30 அடி பள்ளத்தில் திடீரென கவிழ்ந்தது. இதில், 20க்கும் மேற்பட்டோர் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். டிரைவர் உள்பட மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். விபத்தில் சிக்கிய பயணிகள் 'காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' என்று கூச்சலிட்டனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நேரியமங்கலம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்களும் சேர்ந்து, பஸ்சின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் படுகாயம் அடைந்த 20 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோதமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பென்னி என்பவரது மகள் அனிட்டா (14) என்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் பலியான அனிட்டா, கட்டப்பனையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து சிறுமி பலியான சம்பவம் இடுக்கி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+