"16 வயதினிலே".. சினிமா டைரக்டருக்கு.. பெற்ற மகளை விருந்தாக்கிய அம்மா.. இதில் அதிர்ச்சி என்ன தெரியுமா
டைரக்டருக்கு 16 வயது மகளை விருந்தாக்கிய தாயை போலீசார் கைது செய்தனர்
தேனி: 16 வயது மகளின் கதறலை கேட்டு, சித்தி அதிர்ந்துபோய்விட்டார்.. இப்போது பெற்ற தாய் சிறையில் உள்ளார்..!
தேனி மாவட்டம் அல்லிநகரம் கக்கன்ஜி காலனியில் வசித்து வரும் தம்பதி ஜெயராம் - முத்துச்செல்வி.. இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
அங்குள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்... ஜெயராமனுக்கு வெளியூரில் வேலை.. அதாவது அடிக்கடி வேலை விஷயமாக கேரளாவுக்கு சென்றுவிடுவாராம்.

ஏஜென்ட்கள்
அதனால், முத்துச்செல்வியும், மகளும் பெரும்பாலும் தனியாகவே வசித்து வந்துள்ளனர்.. இந்த சமயத்தில்தான், கென்னடி என்ற சினிமா டைரக்டருடன் முத்துச்செல்விக்கு அறிமுகமாகி உள்ளது.. இந்த கென்னடி என்ற டைரக்டர், தஞ்சாவூரை சேர்ந்தவராம்.. குழந்தை நட்சத்திரங்களை தேர்வு செய்வதற்காக, ஒருமுறை முயன்றுள்ளார்.. இதற்கு தனியாக ஏஜென்ட்கள் இருக்கிறார்களாம்.. அந்த வகையில், ராக்கம்மாள் என்ற ஏஜென்ட் மூலம்தான், முத்துச்செல்வி கென்னடிக்கு பழக்கமாகி உள்ளார்.. கடைசியில், அப்படியே கள்ளக்காதல் வரை இருவரும் போய்விட்டார்கள்..அதனால், முத்துச்செல்வியும், மகளும் பெரும்பாலும் தனியாகவே வசித்து வந்துள்ளனர்.. இந்த சமயத்தில்தான், கென்னடி என்ற சினிமா டைரக்டருன் முத்துச்செல்விக்கு அறிமுகமாகி உள்ளது.. இந்த கென்னடி என்ற டைரக்டர், தஞ்சாவூரை சேர்ந்தவராம்.. குழந்தை நட்சத்திரங்களை தேர்வு செய்வதற்காக, ஒருமுறை முயன்றுள்ளார்.. இதற்கு தனியாக ஏஜென்ட்கள் இருக்கிறார்களாம்.. அந்த வகையில், ராக்கம்மாள் என்ற ஏஜென்ட் மூலம்தான், முத்துச்செல்வி கென்னடிக்கு பழக்கமாகி உள்ளார்.. கடைசியில், அப்படியே கள்ளக்காதல் வரை இருவரும் போய்விட்டார்கள்..

டைரக்டர் கென்னடி
ஒருநாள் இந்த விஷயம், மகளுக்கு தெரிந்துவிட்டது.. மகள் கண்டுபிடித்துவிட்டார் என்ற விஷயம், முத்துச்செல்விக்கும் தெரிந்துவிட்டது.. அன்று முதல் மகளை மிரட்ட ஆரம்பித்தார்.. இதை உன் அப்பாவிடமோ, அல்லது வெளியில் யாரிடமோ சொன்னால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டி வந்துள்ளார்.. நாளடைவில், மகளையும் குறி வைத்தார் அந்த டைரக்டர்.. இதை, முத்துச்செல்வியிடம் சொல்லவும், கடைசியில், மகளையும் இந்த பாழுங்கிணற்றில் இழுத்துவிட்டுவிட்டார் பெற்ற தாய்.. டைர்க்டர் கென்னடிக்கு, மகளை பலியாக்கினார்..

டைரக்டர் கொடுமை
இதில், கொடுமை என்னவென்றால், மகளுக்கு காபியில் தூக்க மாத்திரை கலந்து தந்து, அதன்பிறகு, பலாத்காரம் செய்ய சொல்லி உள்ளார்.. இப்படி பலமுறை, கென்னடி ஆசைப்பட்டார் என்பதற்காக, மகளை சித்ரவதைக்கு ஆளாக்கி உள்ளார்.. சமீபத்தில் கோடை விடுமுறையில், சென்னையில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு சிறுமி வந்திருந்தபோதுதான், நடந்ததை எல்லாம் சொல்லி கதறி அழுதிருக்கிறார்..

எஸ்கேப்
இதைக் கேட்டு பதறிப்போன, சிறுமியின் சித்தி சங்கீதா, உடனடியாக சிறுமியை தேனிக்கு அழைத்து வந்து மகளிர் ஸ்டேஷனுக்கு சென்று புகார் தந்தார்.. அந்த புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து, அனைத்து உண்மைகளும் நிரூபணமானது.. இறுதியில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முத்துச்செல்வியை போலீசார் கைது செய்தனர்.. .ஆனால், இந்த விஷயம் தெரிந்து அதற்குள், டைரக்டர் எஸ்கேப் ஆகிவிட்டார்.. அவரை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்..!












Click it and Unblock the Notifications