அருவியில் குளிக்க வந்தவர்கள் மீது.. லாரி மோதி.. உட்கார்ந்த நிலையிலேயே 2 பேர் பலி
நெல்லை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்
நெல்லை: அருவியில் குளிப்பதற்காக காரில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் உட்கார்ந்த நிலையிலேயே 2 மேனேஜர்கள் உயிரிழந்தது பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன். இவர் அங்கு வரும் பிரபல நிதி நிறுவனத்தின் மேனேஜர் ஆவார். இந்த நிறுவனத்தின் புதுக்கோட்டை, திருச்சி பகுதி மேனேஜர்கள், குற்றாலத்தில் சீசன் என்பதால் அங்கும், கேரளாவுக்கு சென்று அங்குள்ள அருவிகளில் குளிக்கலாம் என்றும் முடிவெடுத்தனர்.
அதன்படி, பாண்டீஸ்வரன், பொன் அமராவதி கிளை மேலாளர் ரமேஷ், புதுக்கோட்டை மண்டல மேலாளர் செந்தில்குமார், திருப்பத்தூர் மேலாளர் விஜயகுமார், ஆலங்குடி மேலாளர் காஜா மைதீன் ஆகியோர் சேர்ந்து ஒரே காரில் குற்றாலம் கிளம்பி வந்தனர்.

விபத்து
இன்று காலை திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை அருகே உள்ள கட்டளை குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து ஒரு லாரி எதிரே வேகமாக வந்து, எதிர்பாராதவிதமாக காரில் மோதியது.

3 பேர் படுகாயம்
காரின் முன் சீட்டில் உட்கார்ந்திருந்த பாண்டீஸ்வரன், ரமேஷ் இருவருமே சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த புளியரை போலீஸார், அவர்களை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சடலங்கள்
முன் சீட்டில் உட்கார்ந்த நிலையிலேயே உடல் நசுங்கி உயிரிழந்த பாண்டீஸ்வரன், ரமேஷ் உடல்களை போலீசாரால் மீட்கவே முடியவில்லை. இதையடுத்து, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து காரை உடைத்து, 2 சடலங்களையும் வெளியே எடுத்தனர்.

தீவிர சிகிச்சை
இதில், செந்தில்குமார், விஜயகுமாருக்கு தென்காசி அரசு ஆஸ்பத்திரியிலும், காஜா மைதீனுக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து சம்பந்தமாக விசாரணையும் நடந்து வருகிறது. அருவியில் குளிக்கலாம் என்று ஆசைப்பட்டு சென்றவர்களில் 2 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications