பணப்பட்டுவாடா செய்த திமுக-வினர் 4 பேர் கைது.. ரெய்டு தொடர்கிறது
நெல்லை: நெல்லை அருகே காரில் வைத்து பண விநியோகம் செய்ததாக திமுகவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் வாக்குக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனைதொடர்ந்து, தேர்தல் பறக்கும் படையினர், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, தென் மாவட்டங்களில் மின்சாரத்தை துண்டித்து விட்டு, பணப்பட்டுவாடா நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கருப்பந்துறையில் திமுக வேட்பாளர் ஞான திரவியத்தின் மகன் தினகரன் மற்றும் அவரது நண்பர் நவீன் ஆகியோரிடம் இருந்து ரூ.2.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக காஞ்சிபுரம் அமமுக ஒன்றிய செயலாளர் கூரம் பச்சையப்பனிடம் ரூ.16,800 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, எதிர்க்கட்சியினரை மட்டும் குறிவைத்து, சோதனை நடைபெற்று வருவதாக, புலம்பி வருகின்றனர்.
முன்னதாக,சாத்தூர் அருகே எதிர்க்கோட்டையில் அமமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியனின் தேர்தல் அலுவலகத்தில் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாலையில் அவரது தோட்டத்திலிருந்து ரூ.33 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், மகாதேவன் என்பவரை கைது செய்துள்ளனர்.
-
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
நெல்லை வங்கியில் விசித்திரம்.. கணவரின் இதய சிகிச்சை பணம்.. காசோலை மூலம் திருடப்பட்டது எப்படி?












Click it and Unblock the Notifications