தூங்கிய மகள்கள்.. வீட்டுக்குள் புகுந்த கண்ணாடி விரியன்.. ஆட்சியரிடம் கண்ணீருடன் தாய் கதறல்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வீட்டுக்குள் கண்ணாடி விரியன் பாம்பு நுழைந்ததை அடுத்து அந்த பாம்புடன் பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு கண்ணீருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் வன்னி கொணந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சமரச செல்வி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு சமரச செல்விக்கு சொந்தமான இடத்தில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் ஒரு வீடு கட்டினார்.

வீடு கட்டப்பட்ட இடத்தில் வில்லங்கம் இருப்பதாக கூறி தற்போது வரை மின் வாரியம் அந்த வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது. பல முறை மின்வாரியம் மற்றும் வருவாய் துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த வாரம் கூட நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின் இணைப்பு வேண்டி புகார் அளித்துள்ளார்.
ஆனால் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் திங்கள்கிழமை மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த சமரச செல்வி கையில் ஒரு செத்த பாம்பையும் எடுத்து வந்தார். அப்போது சிறிது நேரத்தில் அழுதார். அந்த பாம்பு கண்ணாடி விரியன் , அது இறந்துகிடந்தது.
அந்த பாம்பை பிடித்து தூக்கி காட்டிய அவர் எனது மூத்த மகள் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் வீட்டில் மின்சாரம் இல்லாததால் படிப்பை தொடர முடியாத நிலை உள்ளது. நன்றாக படிக்கும் நிலையிலும் மகள் படிப்பிற்கு உதவ முடியாத நிலையில் இருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். சில நாட்களாக தனது வீட்டிற்குள் விஷ ஜந்துக்கள் வருவதாக கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் மகள்கள் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டுக்குள் புகுந்த இந்த கண்ணாடி விரியன் பாம்பை தான் அடித்து கொன்றுவிட்டதாகவும் ஆட்சியர் எங்கள் வீட்டில் மின்இணைப்பு இல்லாததால் விஷ ஜந்துக்கள் எல்லாம் நுழைகிறது என்பதை ஆட்சியர் நம்ப மாட்டார் என்பதற்காக செத்த பாம்பை கையில் கொண்டு வந்ததாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து சமரச செல்வியிடம் இருந்த பாம்பை பறிமுதல் செய்த போலீஸார் அவரையும் அவரது மகளையும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க செய்தனர். புகார் மனு மீது விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சை அருகே ஷாக்.. கணவர் - சொந்த அக்காவுக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்.. சிக்கிய மனைவி அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications