மண்டைய பொளந்துருவேன்.. ஸ்டிக்கர் ஒட்டுவதை தடுத்த அரசு பேருந்து டிரைவரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: திருநெல்வேலியில் அரசு பேருந்து ஓட்டுநர் பாஜக நிர்வாகி மருதுபாண்டி என்பவரால் தாக்கப்பட்ட நிலையில், பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் பாஜக ஆதரவு தேர்தல் ஸ்டிக்கரை ஒட்ட முயன்றுள்ளார் பாஜக நிர்வாகியான மருதுபாண்டி. அரசு பேருந்தில் கட்சி தேர்தல் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது எனக் கூறி அதனை தடுக்க முயன்றுள்ளார் அரசு பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணியன்.

BJP executive arrested for assaulting a government bus driver in Nellai

இதையடுத்து, அரசு பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணியன் தலையில் பாட்டிலால் ஆவேசமாக தாக்கியுள்ளார் பாஜக பிரமுகர் மருதுபாண்டி. தலையில் காயமடைந்த அரசு பஸ் டிரைவர் சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய பாஜக பிரமுகர் மருதுபாண்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூரில் சிறியதாக ரெடிமேட் கடை நடத்தி வரும் பெண் ஒருவர் ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி பாஜக வேட்பாளரிடம் கேள்வி எழுப்பியதையடுத்து, அந்த பெண்ணின் கடைக்குள் புகுந்து பாஜக தொண்டர்கள் அராஜகம் செய்தனர். இந்நிலையில், நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+