தமிழகத்தில் கலவரம் செய்தால்தான் பாஜக வளரும்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி பேசிய ஆடியோவால் பரபரப்பு
நெல்லை: தமிழகத்தில் கலவரம் செய்தால்தான் பாஜக வளரும் என நெல்லை பாஜக மாவட்டத் தலைவரிடம் இந்து மக்கள் கட்சி மாநில துணைச் செயலாளர் பேசிய ஆடியோ லீக்காகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளில் 19 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. பாமக, அமமுக, தமாகா, புதிய நீதி கட்சி, தமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை சந்தித்தது.

ஆனால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சி என்கிற போதிலும் அங்கும் பாஜக வெல்லவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் கலவரம் செய்தால்தான் பாஜக வளரும் என இந்து மக்கள் கட்சி நிர்வாகி பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் மாநில துணைச் செயலாளர் உடையார் என்பவர் நெல்லை பாஜக மாவட்டத் தலைவர் தமிழ்ச் செல்வன் என்பவருக்கு போனில் பேசியுள்ளார். அதில் தமிழகத்தில் பாஜக எங்குமே வெல்லவில்லையே என இருவரும் கவலைத் தெரிவிக்கிறார்கள். இதைத் தொடர்ந்து நெல்லையில் நயினார் நாகேந்திரன் பணத்தையெல்லாம் கட்சியினரை நம்பி கொடுக்காமல் அவருடைய உறவினர்களை நம்பி கொடுத்துவிட்டார்.
ஆனால் அவர்கள் யாருமே வாக்காளர்களுக்கு பணத்தை விநியோகிக்கவில்லை. மேலும் கட்சியில் உள்ளடி வேலைகளை யாரோ பார்த்திருக்கிறார்கள். இதனால்தான் நெல்லையில் பாஜக தோற்றது என கூறியபடியே உடையார், தமிழகத்தில் பாஜகவால் ஓட்டை வாங்க முடியுமா, எவனையாவது அடிக்க தெம்பு திராணி இருக்கிறதா? கலவரம் செய்தால்தான் பாஜக தமிழகத்தில் கால் ஊன்ற முடியும்.
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருந்த சரத்குமாருக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக ஜாதி ரீதியிலான கட்சியாக மாறிவிட்டது. அண்ணாமலையின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் சதி செய்துவிட்டனர். இதனால்தான் தமிழகத்தில் பாஜகவை வெற்றி பெற செய்யாமல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் இதற்கு முன்னால் இருந்த எந்த தலைவர்களும் எழுச்சிகரமான பணியை செய்யவில்லை. கட்சியினர் வேலை செய்தால், தமிழகத்தில் பாஜகவை வெற்ற பெற செய்திருப்பார்கள். இவ்வாறு உடையார் பேசியுள்ள ஆடியோ வைரலாகி வருகிறது.
தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதாக தமிழக அரசு கூறி வரும் நிலையில் தமிழகத்தில் கலவரமும், வன்முறையும் அதிகரித்து வருவதாக பாஜக, இந்து அமைப்புகள் கூறி வரும் நிலையில் தற்போது இந்து மக்கள் கட்சி நிர்வாகியே கலவரம் வந்தால்தான் பாஜக வளரும் என கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’











Click it and Unblock the Notifications