நாங்குநேரியில் நாங்களே நிற்போம்.. திமுகவுக்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்.. அதிரடி தீர்மானம்
Recommended Video
நெல்லை: நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உறுதியாக உள்ளதாக நெல்லையில் காங்கிரஸ் கட்சி பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாங்குநேரி சட்டசபை தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. அந்த தொகுதியில் எச் வசந்தகுமாருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு அவரும் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. இதில் காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவற்றில் கன்னியாகுமரி தொகுதியில் வேட்பாளராக எச் வசந்தகுமார் அறிவிக்கப்பட்டார்.

ஆணையம்
இந்த தேர்தலில் வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி ஆகிவிட்டார். இதையடுத்து அவர் நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதியை காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

உதயநிதி கோரிக்கை
இதையடுத்து அந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்று வசந்தகுமாரிடம் கேட்ட போது திமுகவில் பேசி அந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், நாங்குநேரியில் திமுக போட்டியிட வேண்டும் என கூறியிருந்தார். அங்கு எஸ் திருநாவுக்கரசர் இருந்தார்.

தீர்மானங்கள்
இந்த நிலையில் இன்று நெல்லை நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் எச் வசந்தகுமார், காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காங்கிரஸ்
அதில் முதல் தீர்மானமாக நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் உறுதியாக உள்ளது தெரிகிறது.

இடைத்தேர்தல்
சட்டசபையில் பலத்தை உயர்த்த திமுக முயற்சித்து வருகிறது. கடந்த மே மாதம் நடந்த 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 13 தொகுதியில் திமுக வெற்றி பெற்று தனது பலத்தை உயர்த்திகொண்டது. அது போல் எடப்பாடி பழனிச்சாமியின் அரசை கவிழ்ப்பதற்கு இது போன்ற சட்டசபை இடைத்தேர்தல்களில் போட்டியிடுவது தீர்வு என கருதுகிறது.

அதிருப்தி
திமுகவிடம் பேசி நாங்குநேரியை பெறுவோம் என கூறியிருந்த காங்கிரஸ் தற்போது தடாலடியாக திமுகவுக்கு விட்டுக் கொடுக்காமல் நாங்குநேரியில் போட்டியிட உறுதியாக உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் அதிருப்தி நிலவும் என தெரிகிறது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications