நாங்குநேரியில் நாங்களே நிற்போம்.. திமுகவுக்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்.. அதிரடி தீர்மானம்
Recommended Video
நெல்லை: நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உறுதியாக உள்ளதாக நெல்லையில் காங்கிரஸ் கட்சி பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாங்குநேரி சட்டசபை தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. அந்த தொகுதியில் எச் வசந்தகுமாருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு அவரும் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. இதில் காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவற்றில் கன்னியாகுமரி தொகுதியில் வேட்பாளராக எச் வசந்தகுமார் அறிவிக்கப்பட்டார்.

ஆணையம்
இந்த தேர்தலில் வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி ஆகிவிட்டார். இதையடுத்து அவர் நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதியை காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

உதயநிதி கோரிக்கை
இதையடுத்து அந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்று வசந்தகுமாரிடம் கேட்ட போது திமுகவில் பேசி அந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், நாங்குநேரியில் திமுக போட்டியிட வேண்டும் என கூறியிருந்தார். அங்கு எஸ் திருநாவுக்கரசர் இருந்தார்.

தீர்மானங்கள்
இந்த நிலையில் இன்று நெல்லை நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் எச் வசந்தகுமார், காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காங்கிரஸ்
அதில் முதல் தீர்மானமாக நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் உறுதியாக உள்ளது தெரிகிறது.

இடைத்தேர்தல்
சட்டசபையில் பலத்தை உயர்த்த திமுக முயற்சித்து வருகிறது. கடந்த மே மாதம் நடந்த 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 13 தொகுதியில் திமுக வெற்றி பெற்று தனது பலத்தை உயர்த்திகொண்டது. அது போல் எடப்பாடி பழனிச்சாமியின் அரசை கவிழ்ப்பதற்கு இது போன்ற சட்டசபை இடைத்தேர்தல்களில் போட்டியிடுவது தீர்வு என கருதுகிறது.

அதிருப்தி
திமுகவிடம் பேசி நாங்குநேரியை பெறுவோம் என கூறியிருந்த காங்கிரஸ் தற்போது தடாலடியாக திமுகவுக்கு விட்டுக் கொடுக்காமல் நாங்குநேரியில் போட்டியிட உறுதியாக உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் அதிருப்தி நிலவும் என தெரிகிறது.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications