தனுஷ் எம்.குமார் - தென்காசி (தனி) திமுக வேட்பாளர் – 28 ஆண்டுகளுக்குப் பின் தென்காசியில் திமுக..!
தென்காசி தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் தனுஷ் எம்.குமார்.
தென்காசி: தென்காசி மக்களவைத் தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் தனுஷ் எம்.குமார் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ் எம்.குமார்(42). பி.இ., எம்.பி.ஏ., எல்.எல்.பி., படித்தவரான தனுஷ், இண்டேன் கேஷ் டீலராக இருக்கிறார். தேவேந்திர குல வேளாளரான இவர் விவசாயியும் கூட.

இவரது தந்தை தனுஷ்கோடி, ராளபாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். தாய் இந்திரா, ராஜபாளையம் முன்னாள் ஊராட்சித் தலைவர்.
கடந்த 1996ம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வரும் தனுஷ், 10 ஆண்டுகளாக விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்து வருகிறார். இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
1977-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம். அருணாச்சலம் தொடர்ந்து இங்கு வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டார்.ன் பின்னர் அதிமுக வேட்பாளர் முருகேசன் 1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 2004 மற்றும் 2009 ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் சி.பி.ஐ கட்சி இங்கு வெற்றி பெற்றது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் முருகேசனின் மனைவி வசந்தி முருகேசன் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தென்காசி மக்களவைத் தொகுதியில் இதுவரையில் தி.மு.க ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை. சுமார் 28 ஆண்டுகளுக்குப் பின் இத்தொகுதியில் மீண்டும் திமுக போட்டியிடுகிறது. இந்த வரலாற்றை மாற்றி தென்காசியில் தன் வெற்றிக் கொடியை தனுஷ் நாட்டுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications