நெல்லை அருகே கொடூரம்.. பிறந்து 20 நாட்களேயான ஆண் குழந்தையை ஏரியில் வீசி கொன்ற தந்தை

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பிறந்து 20 நாட்களேயான ஆண் குழந்தையை ஏரியில் வீசி கொன்ற தந்தை

    நெல்லை: 20 நாட்களேயான ஆண் குழந்தையை கொலை செய்ததாக தந்தையை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் நெல்லை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை பேட்டையை அடுத்த சீதபற்பநல்லுர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகள் இசக்கியம்மாள் (எ) ஆனந்தி (20). இவருக்கும் ஆலங்குளம் அருகே சிவலார் குளத்தையடுத்த அய்யனார்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் இசக்கிமுத்து (27) என்பவருக்கும் 3 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

    Father kills 20 days old boy near Nellai

    ஆனந்திக்கு கடந்த 20 நாள்களுக்கு முன்னர் தான் ஆண் குழந்தை பிறந்தது. நேற்றிரவு மனைவி,குழந்தையை பார்க்க வந்த இசக்கிமுத்து அங்கேயே தங்கியுள்ளார்.

    இன்று அதிகாலை குழந்தையையும், கணவரையும் காணாததால் ஆனந்தி அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து இசக்கிமுத்து சற்று நேரம் கழித்து வந்துள்ளார். அவரிடம் குழந்தை குறித்து, கேட்டதற்கு மழுப்பலாக பதில் கூறியுள்ளார்.

    இச்சம்பவம் குறித்து சீதபற்பநல்லூர் போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை குளத்தில் வீசியதாக தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த போலீசார் அங்கு தேடிய போது குழந்தை உடல் மீட்கப்பட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இசக்கிமுத்துவிடம் சீதபற்பநல்லூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அய்யப்பன் விசாரணை நடத்தி வருகிறார்.

    குடும்ப பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+