விடிய, விடிய வெளுத்து வாங்கிய கனமழை.. குற்றாலம் அருவிகளில் வெள்ளபெருக்கு!
தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலையில் விடிய, விடிய கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது

இதன்படி தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது.
இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையினால் இன்று காலை குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முழு ஊரடங்கு தடை காரணமாக அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது
இதே போல தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையம், ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications