ஆலங்குளம்.. மனோஜ் பாண்டியன் வெற்றி.. பூங்கோதை 2வது இடம்.. அமோக வாக்குகளை அள்ளி ஹரி நாடார் 3வது இடம்
நெல்லை: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 3,605 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரும் சிட்டிங் எம்எல்ஏவுமான பூங்கோதை ஆலடி அருணாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். பனங்காட்டு படை கட்சி வேட்பாளர் ஹரி நாடார் 3வது இடம் பிடித்துள்ளார்.
ஆலங்குளம் தொகுதி விஐபி அந்தஸ்து பெற்று உள்ளது. இதற்கு காரணம் அதிமுக தரப்பில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மகனும் பிரபல வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன் போட்டியிட்டார்.
திமுக தரப்பில் சிட்டிங் எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா களம் கண்டார். இந்த நிலையில்தான் பனங்காட்டு படை கட்சி ஹரிநாடார் அங்கு போட்டியிட முடிவு செய்தார்.

கழுத்து நிறைய நகை
கழுத்து நிறைய நகை அணிந்தபடி அவர் செய்யும் பிரச்சாரத்திற்கு பெண்கள் கூட்டம் அதிகமாக வருகிறது என்று செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், வெறுமனே நகைகளை பார்க்க வந்த கூட்டம் அல்ல, அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும் வண்ணம் அமைந்து விட்டன.

மதியம் நிலவரம்
மதியம் 3 மணி நிலவரப்படி தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்ட வாக்குகள் அடிப்படையில் பார்த்தால் ஹரிநாடார், 14680 வாக்குகளை பெற்றிருந்தார். முதலிடத்தில் உள்ள மனோஜ் பாண்டியன் 15785 வாக்குகள் பெற்றிருந்தார்.

மனோஜ் பாண்டியன் வெற்றி
14136 வாக்குகளைப்பெற்று பூங்கோதை ஆலடி அருணா மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தார். ஆனால் பிறகு டிரெண்ட் மாறியது. பூங்கோதை ஆலடி அருணா 70,380 வாக்குகளும், மனோஜ் பாண்டியன் 73,985 வாக்குகளும் பெற்றனர். 3,605 வாக்குகள் வித்தியாசத்தில் மனோஜ் பாண்டியன் வென்றார்.

ஹரி நாடார் அமோகம்
இங்கு நாம் தமிழர் கட்சி நான்காவது இடம் பிடித்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணியில் தேமுதிக இங்கு போட்டியிட்டது. அந்த கட்சி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வெப்சைட் சுயேச்சை என்று குறிப்பிடும் ஹரி நாடார், இந்த அளவுக்கு பெரிய கட்சிகளுக்கு போட்டி கொடுத்துள்ளார். ஹரி நாடார் 37,632 வாக்குகளைப் பெற்றுள்ளார். எனவே 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications