குற்றாலத்தில் கடும் வறட்சி.. அருவிகளில் தண்ணீர் இல்லை.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
Recommended Video
குற்றாலம்: குற்றாலத்தில் கடும் வறட்சி நிலவி வருவதால் தண்ணீரின்றி வெறும் பாறைகளாக காட்சியளிப்பதை கண்டு சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனது. இதையடுத்து தென்மேற்கு பருவமழையால் நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பியது. இந்த நிலையில் தமிழகத்துக்கு வர வேண்டிய புயல் ஒடிஸாவுக்கு திரும்பி விட்டதால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கடும் வெப்பம் நிலவி வருகிறது.

நீர்வரத்து இல்லை
இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் வெயில் கொடுமையிலிருந்து தப்ப ஒகேனக்கல், குற்றாலம் நீர் வீழ்ச்சிகளுக்கு செல்கின்றனர். ஆனால் கடும் வறட்சி காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஐந்தருவி, பழைய குற்றாலம் மெயின் அருவி, புலியருவி போன்ற அருவிகளில் முற்றிலும் நீர்வரத்து இல்லை.

தண்ணீர்
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வெறும் பாறையாகவே காட்சி அளிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்ததால் சில நாட்களுக்கு முன்பு அருவிகளில் தண்ணீர் விழுந்தது.

ஏமாற்றம்
ஆனால் தற்போது முற்றிலும் இப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் அருவிகளில் நீரின்றி காட்சியளிக்கிறது. இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்து வரக் கூடிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

வியாபாரிகள் கவலை
குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் இங்கு உள்ள வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் கவலை அடைந்துள்ளனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications