கேரளா மூணாறு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு- 22 பேர் தமிழக தொழிலாளர்கள்
திருநெல்வேலி: கேரளா மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Recommended Video
கேரளாவில் கனமழை கொட்டி வருவதால் திரும்பிய திசையெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

இடைவிடாது கொட்டிய கனமழையால் கேரளாவில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மூணாறில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 80க்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரோடு மண்ணில் புதையுண்டனர்.
தற்போதைய நிலையில் சடலமாக மீட்கப்பட்டோரின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 23 பேர் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

மூணாறு நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் மண்ணில் புதையுண்டு போயுள்ளனர். மேலும் 19 பள்ளி மாணவர்களும் உறங்கிய நிலையிலேயே மண்ணில் புதையுண்டு மாண்டு போனதாக உருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications