ஜூனில் Mobile App அறிமுகம்! பதிவேற்றம் செய்த 24 மணி நேரத்தில் மோசமான சாலை சரி செய்யப்படும்! -எவ வேலு
நெல்லை: பள்ளங்கள் உள்ள சாலை பகுதிகளை பொதுமக்கள் தங்கள் கைப்பேசி முலம் புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள Mobile Appஐ ஜூன் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்வார் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ வேலு தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் இது தொடர்பாக சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், நெல்லையில் ஆய்வுக்காக சென்ற அவர் அங்கு செய்தியாளர்களிட இதனைக் கூறினார்.

இதனிடையே மொபைல் ஆப் குறித்தும் அதில் மோசமான சாலைகளை பதிவேற்றம் செய்வது குறித்தும் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது;
''சாலை பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தடையற்ற போக்குவரத்திற்கு பள்ளங்களற்ற சாலைகளை மக்களுக்கு வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது.
பள்ளங்களை உடனுக்குடன் கண்டறிவதில் பொது மக்களின் பங்களிப்பு இன்றியமையாதது. பள்ளங்கள் உள்ள சாலை பகுதிகளை தங்கள் கைப்பேசி முலம் புகைப்படம் எடுத்து செயலியில் (Mobile App) பதிவேற்றம் செய்யும் வகையில் கைப்பேசி செயலி (Mobile App) உருவாக்கப்படும்.
சாலைகளில் உள்ள பள்ளங்கள் மாநில நெடுஞ்சாலைகளில் 24 மணிநேரத்திலும், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் மாவட்ட இதர சாலைகளில் 72 மணிநேரத்திலும் சரி செய்யப்படும்.
மேலும், சரி செய்யப்பட்ட புகைப்படம் உடனுக்குடன் கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறாக "பள்ளங்களற்ற சாலைகள்" என்ற இலக்கை நோக்கி நெடுஞ்சாலைத்துறை முன்னேறி செல்லும்.''












Click it and Unblock the Notifications