முடிவே இல்லாமல் தொடரும் படுகொலைகள்... உமா மகேஸ்வரிக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் ஆவேசம்
நெல்லை : திமுக முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி உள்ளிட்ட 3 பேரை படுகொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என நெல்லையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தினார்.
நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "1996 இல் நான் சென்னை மேயராக இருந்த போது உமா மகேஸ்வரி நெல்லை மாநகராட்சியில் முதல் பெண் மேயராக பதவியேற்று மக்களுக்கு பல சிறப்பான பணிகளை செய்தவர்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு
அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு சேவை செய்தவர்.கலைஞர் பாராட்டும் வகையில் ஒரு முறை நடைபெற்ற முப்பெரும் விழாவில் பாவேந்தர் விருது வழங்கி பாராட்டப் பெற்றவர்.

உரிய தண்டனை
நினைத்து பார்க்க முடியாத சூழலில் நேற்று மூவர் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த ஆட்சியில் தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நாள்தோறும் நடந்து வருகிறது, இதற்கு முடிவே இல்லாமல் போய் கொண்டு இருக்கிறது .படுகொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு கூறினார்.

இருவரை பிடித்து விசாரணை
இதனிடையே பரப்பரப்பை ஏற்ப்படுத்திய நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கொலை நடந்த போது அவரது வீட்டின் அருகே இருந்த சில வீடுகளின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அதன் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வண்ணம் சுற்றிய இருவரை பிடித்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

விரைவில் குற்றவாளிகள் கைது
மேலும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஏற்கனவே 3 பெண்கள் உள்பட 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இதில் உள்ளூரை சேர்ந்தவர்கள் சிலரும் அடங்குவர்.மேலும் இன்னும் ஓரிரு தினங்களில் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என கூறப்படுகிறது.
-
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
நெல்லை வங்கியில் விசித்திரம்.. கணவரின் இதய சிகிச்சை பணம்.. காசோலை மூலம் திருடப்பட்டது எப்படி? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications