துப்பு துலங்கப்படாத உமா மகேஸ்வரி மரணம்.. வழக்கு விசாரணை நடக்கிறதா? இல்லையா?.. கனிமொழி சரமாரி கேள்வி
Recommended Video
நெல்லை: நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட திமுக முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி , அவரது கணவர் முருகசங்கரன் ஆகியோர் படத்திற்கு திமுக மாநில மகளிரணி செயலாளரும் , தூத்துக்குடி லோக்சபா எம்பியுமான கனிமொழி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நெல்லை கடந்த 23-ஆம் தேதி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி , அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் வீட்டின் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இவர்களது இல்லத்திற்கு திமுக மாநில மகளிரணி செயலாளரும் , தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது உமா மகேஸ்வரியின் மகள்கள் மற்றும் உறவினர்களிடம் ஆறுதல் கூறினார். தொடர்ந்து கொலையான பணிப்பெண் மாரியம்மாளின் இல்லத்திற்கும் சென்று அவரது மூன்று குழந்தைகளையும் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.

ஆர்வம்
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேயர் உமாமகேஸ்வரி அனைவரிடமும் இனிமையாக பழக கூடியவர் . கட்சி பணிகளில் தன்னை ஆர்வமாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்படும் சகோதரி.

நிகழ்வு
அவர் இப்படி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுவரை இந்த வழக்கில் யாரையும் கண்டுபிடிக்கவில்லை , கைது செய்யப்படவில்லை என்ற நிலையை பார்க்கும் போது அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தையும் , கோபத்தையும் உருவாக்கக் கூடிய நிலையை இந்த நிகழ்வு உருவாக்கியுள்ளது.

புலம் என்ன
என்ன காரணம் என்று தெரியாமல் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் , அந்த வீட்டில் பணியாற்றிய சகோதரியின் 3 குழந்தைகளும் ஆதரவற்றவர்களாக்கப்பட்டுள்ளார்கள் . இந்த கொலைகளுக்கான பின்புலம் என்ன என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

தண்டனை
விரைவில் இதற்கு நியாயம் கிடைக்க வேண்டும். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படவேண்டும். அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன். இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது மிக மோசமான சட்டம் ஒழுங்கை காட்டுகிறது, உண்மையாகவே விசாரணை நடக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications