வெளியூர் நபருக்கு சீட் கொடுத்தது ஏன்? நாங்குநேரி தேர்தலால் காங்கிரஸில் குழப்பம்.. என்ன நடக்கிறது?
நாங்குநேரி தொகுதியின் சட்டசபை இடைத்தேர்தல் வேட்பாளராக ரூபி மனோகர் நியமிக்கப்பட்டு இருப்பது காங்கிரஸ் கட்சிக்குள் பூசலை ஏற்படுத்தி உள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்.
சென்னை: நாங்குநேரி தொகுதியின் சட்டசபை இடைத்தேர்தல் வேட்பாளராக ரூபி மனோகர் நியமிக்கப்பட்டு இருப்பது காங்கிரஸ் கட்சிக்குள் பூசலை ஏற்படுத்தி உள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்.
திமுக கூட்டணி சார்பாக நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகர் போட்டியிடுகிறார். இவருக்காக அடுத்த வாரம் முழுக்க திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
நாங்குநேரி எம்எல்ஏவாக காங்கிரஸ் உறுப்பினர் வசந்த குமார் இருந்தார். ஆனால் இவர் கன்னியாகுமரி எம்பி தேர்தலில் நின்று வென்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தற்போது அங்கு இடைத்தேர்தல் வந்துள்ளது .

என்ன அறிவிப்பு
நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளராக வசந்த குமாரின் நண்பர் ரூபி மனோகர் போட்டியிடுகிறார். இந்த அறிவிப்பு தற்போது கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சிக்குள் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு நாங்குநேரி தொகுதியில் பெரிதாக செல்வாக்கு இல்லை. அங்கு மக்களுக்கு அவரை தெரியாது, என்று உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள்.

ஊர்
ரூபி மனோகரன் கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்தவர்தான். அங்கு இருக்கும் சிறிய கிராமமான முன்சிறையை சோ்ந்தவா். ஆனால் கல்லூரிக்கு பின் இவர் செட்டில் ஆனது சென்னையில். அங்குதான் இவர் வேலை பார்க்கிறார்.

வருவது இல்லை
இவர் பிசினஸ் செய்வது சென்னையில்தான். அதேபோல் காங்கிரஸ் தொடர்பான பணிகளையும் இவர் கன்னியாகுமரியில் செய்தது கிடையாது. அரசியல் ரீதியாக இவர் கன்னியாகுமரிக்கோ, நாங்குநேரிக்கோ பெரிதாக பயணம் செய்தது கிடையாது.

அரசியல் எப்படி
அதேபோல் கட்சி சார்பாக, இவர் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். இதனால்தான் தற்போது தென் மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கொதிப்பில் இருப்பதாக தகவல்கள் வருகிறது. தென் மாவட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் இருக்கிறார்கள்.

ஆனால என்ன
நிறைய மூத்த நிர்வாகிகள் கூட இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கொடுக்கவில்லை. கட்சிக்காக உள்ளூரில் உழைத்தவர்களுக்கு வாய்ப்புள்ளது. ஆனால் சென்னையில் இருக்கும் நபருக்கு ஏன் வாய்ப்பு கொடுத்தார்கள். இது காங்கிரஸ் கட்சியின் வெற்றிவாய்ப்பை பாதிக்க வாய்ப்புள்ளது, என்று காங்கிரஸ் நிர்வாகிகள் புலம்புகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications