Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவி மினரல்ஸ் ரூ.2,195 கோடி செலுத்த நெல்லை ஆட்சியர் உத்தரவு! 6 நிறுவனங்களுக்கு பறந்தது நோட்டீஸ்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: சட்ட விரோதமாக தாது மணல் உள்ளிட்ட கனிமங்களை எடுத்த 6 நிறுவனங்கள் அரசுக்கு ரூ.3,528 கோடி செலுத்த வேண்டும் என நெல்லை ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விவி மினரல்ஸ் நிறுவனம் ரூபாய் 2,195 கோடி செலுத்த நெல்லை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தாது மணல் எடுக்கும் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மட்டும் அரசுக்கு ராயல்டி மற்றும் கனிமவள கட்டணமாக ரூ.2,195 கோடி செலுத்த வேண்டும் நெல்லை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். டிசம்பர் 16 ஆம் தேதியிட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

nellai minerals

விவி மினரல்ஸ் நிறுவனம் மட்டும் 2002 ஆம் ஆண்டு முதல் 2014 வரை நெல்லை மாவட்டத்தில் 2 லட்சம் டன் கனிமங்களை சட்டவிரோதமாக எடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை கலெக்டர் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தாது மணல் அள்ளுவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக அப்போதைய செயலாளர் ககந்தீப் சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுக்கள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொண்டன.

இந்த ஆய்வில், பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியானது. 2015 ஆம் ஆண்டு இது தொடர்பான அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட தாது மணல் ஆலைகள் மூடப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் ரூ.5,832 கோடியை வசூலிக்க உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தான், நெல்லை மாவட்டத்தில் உள்ள 6 கனிமவள நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக தாதுமணல் அள்ளியதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கடந்த டிசம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சட்ட விரோதமாக தாது மணல் உள்ளிட்ட கனிமங்களை எடுத்த கார்னெட், இல்மனைட், விவி மினரல்ஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் அரசுக்கு ரூ.3,528 கோடி செலுத்த வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நெல்லை மாவட்ட ஆட்சியரை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், கனிம வள கொள்ளையில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+