விவி மினரல்ஸ் ரூ.2,195 கோடி செலுத்த நெல்லை ஆட்சியர் உத்தரவு! 6 நிறுவனங்களுக்கு பறந்தது நோட்டீஸ்!
நெல்லை: சட்ட விரோதமாக தாது மணல் உள்ளிட்ட கனிமங்களை எடுத்த 6 நிறுவனங்கள் அரசுக்கு ரூ.3,528 கோடி செலுத்த வேண்டும் என நெல்லை ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விவி மினரல்ஸ் நிறுவனம் ரூபாய் 2,195 கோடி செலுத்த நெல்லை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தாது மணல் எடுக்கும் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மட்டும் அரசுக்கு ராயல்டி மற்றும் கனிமவள கட்டணமாக ரூ.2,195 கோடி செலுத்த வேண்டும் நெல்லை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். டிசம்பர் 16 ஆம் தேதியிட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

விவி மினரல்ஸ் நிறுவனம் மட்டும் 2002 ஆம் ஆண்டு முதல் 2014 வரை நெல்லை மாவட்டத்தில் 2 லட்சம் டன் கனிமங்களை சட்டவிரோதமாக எடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை கலெக்டர் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தாது மணல் அள்ளுவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக அப்போதைய செயலாளர் ககந்தீப் சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுக்கள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொண்டன.
இந்த ஆய்வில், பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியானது. 2015 ஆம் ஆண்டு இது தொடர்பான அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட தாது மணல் ஆலைகள் மூடப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் ரூ.5,832 கோடியை வசூலிக்க உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தான், நெல்லை மாவட்டத்தில் உள்ள 6 கனிமவள நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக தாதுமணல் அள்ளியதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கடந்த டிசம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சட்ட விரோதமாக தாது மணல் உள்ளிட்ட கனிமங்களை எடுத்த கார்னெட், இல்மனைட், விவி மினரல்ஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் அரசுக்கு ரூ.3,528 கோடி செலுத்த வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நெல்லை மாவட்ட ஆட்சியரை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், கனிம வள கொள்ளையில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications