திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கார் ஷெட்டில் இருந்து அபயகுரல்.. நடுங்கி போன மக்கள்.. கடைசியில் பார்த்தால்... சபாஷ் நெல்லை போலீஸ்

நெல்லையில் ஒரு நாயை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்

Google Oneindia Tamil News

நெல்லை: ஒரு கார் ஷெட்டில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டதுமே அந்த பகுதி மக்கள் வெலவெலத்து போய்விட்டனர்.

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு கார்களை நிறுத்துவதற்கு ஒரு ஷெர் தனியாக உள்ளது.. அந்த ஷெட்டில் இருந்து திடீரென ஒரு சத்தம் கேட்டது.

Nellai Police rescue a dog, and public thank

அது நாய் ஊளையிடுவது போலவே இருந்தது.. அதேசமயம், அபயக்குரல் போலவும் இருந்தது.. பகல் நேரத்தில் ஷெட்டில் இருந்து இப்படி ஒரு சத்தம் கேட்டதும், அந்த பகுதி மக்கள் பயந்துவிட்டனர்.. காரணம், அந்த ஷெட் பூட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து, பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணனுக்கும் தகவல் அளித்தனர்.. இதையடுத்து, அவர்கள் அனுமதியுடன் போலீசார் அங்கு விரைந்து வந்து கார் ஷெட்டின் பூட்டை உடைத்து திறந்தனர்.. அப்போது ஒரு நாய் உள்ளே இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர்.. பிறகு அதை பத்திரமாக மீட்கவும் செய்தனர்.

ஸ்டிரைட்டா.. ஸ்டாலினுக்கு சவால் விட்ட குஷ்பு.. பதிலடி தருமா திமுக.. சூடாகும் களம்..!ஸ்டிரைட்டா.. ஸ்டாலினுக்கு சவால் விட்ட குஷ்பு.. பதிலடி தருமா திமுக.. சூடாகும் களம்..!

நேற்று ஞாயிற்றுக்கிழமை லீவு என்பதால், கதவு பூட்டப்பட்டுள்ளது.. ஆனால் உள்ளே நாய் இருப்பது தெரியாமல் பூட்டிவிடவும், ராத்திரி முழுக்க கத்தி உள்ளது.. ஆனால், இன்று காலையில்தான் நாய் குரைக்கும் சத்தம் அங்கிருந்தோருக்கு கேட்டுள்ளது. இதையடுத்து, போலீசார் அந்த ஷட்டருக்கு வேறு ஒரு பூட்டு போட்டனர். நாய் மீட்கப்பட்டதை அடுத்து அந்த பகுதி மக்களும் நிம்மதி அடைந்தனர்.

English summary
Nellai Police rescue a dog, and public thank
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X