நெல்லை புறக்காவல் நிலையம் முன்பு இளைஞர் வெட்டிக் கொலை! கதறலுடன் தாய் அளித்த பரபரப்பு பேட்டி
நெல்லை: நெல்லையில் புறக்காவல் நிலையம் முன்பு படுத்திருந்த இளைஞரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் அருகே உள்ள கருப்பந்துறை பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ. இவருக்கு 2 மகள் உள்ளனர். அது போல் 27 வயதாகும் சந்தியாகு என்ற மகனும் இருந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை கருப்பந்துறை புறக்காவல் நிலைய வாசலில் சந்தியாகு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் சந்தியாகுவை அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது.
இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டனர். இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்தியாகு உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவருடைய உறவினர்கள் தகவல் அறிந்து புறக்காவல் நிலையம் முன் திரண்டனர். தகவலறிந்த துணை ஆணையர் சரவணக்குமார், உதவி ஆணையர் ராஜேஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ், ரமேஷ் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.
போலீஸார் சடலத்தை எடுக்க முயன்ற போது சந்தியாகுவின் உறவினர்கள் காவல் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீஸாரின் சந்தியாகுவின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள், மேலும் சந்தியாகுவை வெட்ட பயன்படுத்திய அரிவாளில் ரேகையை சேகரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து சந்தியாகுவின் தாய் கூறியிருக்கையில் எங்கள் ஊரில் படிக்கும் பிள்ளைகளுக்கு எல்லாம் கஞ்சா கொடுக்கிறார்கள். என் பேரனுக்கும் கஞ்சா கொடுத்து அவனை பள்ளி பக்கமே போகவிடாமல் தடுக்கிறார்கள். எங்கள் ஊரில் 10 பிள்ளைகள் படிக்காமல் இருக்கிறார்கள். இதை என் மகன் எதிர்த்ததால்தான் அவனை வெட்டிக் கொன்றுவிட்டார்கள் என தெரிவித்தார்.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications