மழைக்கு மரியாதை கொடுங்கடா தம்பிகளா.. ஒதுங்கி நின்ற தொண்டர்களை கண்டித்த சீமான்.. என்ன நடந்தது?
நெல்லை: நாதக சார்பாக நடத்தப்பட்டு வரும் கடலம்மா மாநாட்டில் கொட்டும் மழையில் சீமான் உரையாற்றிய போது, மழையில் நனையாமல் இருக்க ஒதுங்கி தொண்டர்களை கண்டித்திருக்கிறார். மழைக்கு மரியாதை கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிய சீமான், கடன் மனிதருக்கு செய்யும் நன்மைகள் குறித்து பேசினார்.
நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுச்சூழல் பிரச்சனைகளை முன் வைத்து தொடர்ச்சியாக பல்வேறு மாநாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே மதுரையில் ஆடு - மாடுகள் மாநாடு நடத்தி சீமான் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். தொடர்ந்து மரங்கள் மாநாடு, மலைகள் மாநாடு உள்ளிட்டவற்றை நடத்திய சீமான், இயற்கை பாதுகாப்பை கோரிக்கையாக முன் வைத்தார்.

அந்த வகையில் கடல்சார் வாழ்வாதாரத்தையும், கடலையும் பாதுகாக்கும் நோக்கத்துடன், ஆதி நீயே.. ஆழித்தாயே என்ற முழக்கத்தை முன் வைத்து நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் கடலம்மா மாநாட்டை சீமான் நடத்தி வருகிறார். இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் இடையே திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதன் காரணமாக அங்கிருந்த சேர்களை கையில் எடுத்துக் கொண்ட நாதகவினர், மழையில் நனையாமல் இருக்க தலைக்கு மேல் கொண்டு சென்று மறைத்து கொண்டனர். இன்னும் சிலரோ, மழையில் நனையாமல் இருக்க கொஞ்சம் ஓரமாக ஒதுங்கி நின்றனர். இதனை மழையில் நனைந்தவாறே சீமான் கவனித்து கொண்டு உரையாற்றினார்.
பின்னர் திடீரென சீமான், மழைதான்யா.. கடலம்மாவை பேசும் போது மழை வரவில்லை என்றால், பிறகு கடலுக்கு என்ன மரியாதை இருக்கிறது.. நீ நனைந்தால் முளைப்பதற்கு வெங்காயமும் அல்ல.. விதையோ, பூண்டோ இல்லை.. மழைக்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ளுங்கடா தம்பிகளா.. சேரினை இறக்குங்கடா என்று கண்டித்தார்.
தொடர்ந்து, சாதாரண மழை தான்யா உக்காரு.. குண்டு மழை பெய்யும் போதே ஓடாம ஒரே இடத்தில் நின்ற வீரர்கள் நம்ம.. சாதாரண குளிர் மழைக்கா போய்டுவோம்.. என்றார். பின்னர் மழை நின்றபின், சும்மா நம்மை வாழ்த்துவிட்டு போய்விட்டது என்று தெரிவித்தார். சீமானின் இந்த பேச்சு டிரெண்டாகி இருக்கிறது.
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே மழை பெய்தாலும், நனைந்து கொண்டே சீமான் தொடர்ந்து உரையாற்றும் பழக்கம் கொண்டவர். தற்போது நாதகவினர் மழையில் நனையாமல் ஒதுங்கி நின்றதற்கு சீமான் கண்டித்திருப்பது பலரின் கவனத்தையும் திருப்பி இருக்கிறது.
-
தென்மேற்கு பருவமழை தாமதமாவது ஏன்? புதிய தேதியை அறிவித்த வானிலை மையம்.. அதிகரிக்கும் எல் நினோ அச்சம்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications