ஆத்தா.. காளியம்மா.. ஆஹா.. சு. பொன்னுத்தாய்க்கு சாமி வந்துருச்சே.. பரபரத்த சிவகிரி!
தென்காசி அமமுக வேட்பாளர் பொன்னுதாயி திடீரென சாமி வந்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகிரி: விஷயம் தெரியுமா.. அமமுக வேட்பாளர் பொன்னுதாய்.. ஸாரி சு.பொன்னுதாய்-க்கு திடீரென்று சாமி வந்துவிட்டதாம்! கோயிலில் சாமி கும்பிட்டு கொண்டே இருந்தாராம்.. அப்போதுதான் அம்மா.. தாயே என்று சாமியாட ஆரம்பித்துவிட்டாராம்!
தென்காசி தொகுதியில் அமமுக வேட்பாளராக களம் இறங்குபவர் சு.பொன்னுதாய். ஏற்கனவே இவர் பெயரில் இங்கு 4 பெண் வேட்பாளர்கள், இதே பெயரில் உள்ளார்கள். இதனால் பெயர் குழப்பத்தில் தொகுதி மக்கள் குழம்பி உள்ளனர்.

இந்நிலையில், தீவிர வாக்கு சேகரிப்பில் பொன்னுதாய் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினமும் பிரச்சாரத்துக்கு சென்ற பொன்னுதாயி, சிவகிரி அருகே தேவிபட்டினம் தட்டாங்குளம் காளியம்மன் கோயிலில் சாமி கும்பிட சென்றார்.
அவருடன் தொண்டர்கள், ஆதரவாளர்களும் உடன்சென்றனர். சாமி கும்பிட்டு கொண்டே இருந்த பொன்னுதாயிக்கு திடீரென சாமி வந்து ஆட ஆரம்பித்து விட்டார். இதை பார்த்து கட்சி தொண்டர்களுக்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் பொன்னுதாயி "ஆத்தா.. தாயீ.." என்று கூறியபடியே அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்துவிட்டார். பின்னர், கோயிலில் இருந்த அனைவருக்கும் பொன்னுதாயி நெற்றியில் விபூதி பூசிவிட்டார்.
அங்கிருந்தவர்கள் எல்லோரும் பொன்னுதாயியை கையெடுத்து கும்பிட்டு வணங்கினார்கள். கொஞ்சம் நேரம் கழித்து இயல்பு நிலைக்கு வந்தார் பொன்னுதாயி, தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.












Click it and Unblock the Notifications