தென்காசி கோவில் யானை வள்ளி திடீர் பலி.. மக்கள் அதிர்ச்சி.. கோவில் நிர்வாகம் மீது புகார்!
தென்காசி அருகே இலஞ்சி குமாரர் கோவில் யானை வள்ளி உடல் நலக்குறைவால் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி: தென்காசி அருகே இலஞ்சி குமாரர் கோவில் யானை வள்ளி உடல் நலக்குறைவால் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி அருகே இலஞ்சி குமாரர் கோவில் யானை வள்ளி தமிழகம் முழுக்க பிரபலம் ஆனது. கோவில் திருவிழா, சாமி ஊர்வலம், சிறப்பு வழிபாடு என்றால் இந்த யானையை பார்க்க பல ஊர்களில் இருந்தும் மக்கள் வருவது வழக்கம்.

இந்த நிலையில் இந்த யானையை கடந்த சில மாதங்களாக சரியாக பராமரிக்கவில்லை என்று புகார் வைக்கப்பட்டது. யானைக்கு சரியான சாத்தான உணவு பொருட்கள் வழங்கப்படுவது இல்லை என்று புகார் வைக்கப்பட்டு வந்தது.
இதற்கு இடையில் இன்று வள்ளி யானை மாலை கோவில் பூஜைக்கு பின் கோவில் பிரகாரத்தை வலம் வந்தது. அப்போது திடீர் என்று யானை எதிர்பாராத விதமான மயங்கி விழுந்தது. பின் மருத்துவர்கள் வந்து யானையை பரிசோதித்து பார்த்ததில் யானை உடல் நலக்குறைவால் பலியானது உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யானை சரியாக பராமரிக்காததே அதன் மரணத்துக்கு காரணம் என்று மக்கள் புகார் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications