மணிமுத்தாறில் 29 செ.மீ மழை பதிவு... கிடுகிடுவென நிரம்பும் நெல்லை மாவட்ட நீர்நிலைகள்!
திருநெல்வேலி : வடகிழக்கு பருவமழையின் எதிரொலியாக தென்தமிழகத்தில் மழை சக்கை போடு போட்டு வருகிறது. பருவமழை தொடக்கமே நெல்லை மாவட்ட மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக நல்ல மழை பெய்துள்ளதால் இங்குள்ள அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துகொண்டே வருகிறது.
தமிழகத்திற்கு பெரிய அளவில் மழையை கொடுப்பது வடகிழக்குப் பருவமழையே, வடகிழக்குப் பருவமழை பற்றாக்குறையாக பெய்தால் கோடை காலத்தில் மக்கள் சந்திக்கும் தண்ணீர் பிரச்னைக்கு ஓரளவேனும் தீர்வைத் தரும். அக்டோபர் கடைசி வாரத்தில் தொடங்க வேண்டிய வடகிழக்குப் பருவமழையானது நவம்பர் 1ம் தேதி தொடங்கியது.
சென்னையில் இதுவரை அதிக அளவில் மழை பதிவாகாத நிலையில் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம் முதலே நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக டெல்டா மாவட்டங்களில் விடியவிடிய மழை கொட்டித் தீர்க்கிறது, இதனால் நேற்று நாகை, திருவாரூர் உள்ளிட்ட 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

விட்டு விட்டு மழை
நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அவ்வபோது மழை நனைத்து வருவதால் தீபாவளிக்காக போடப்பட்டுள்ள கடைகளில் வியாபாரம் மந்தமாகவே நடப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மணிமுத்தாறில் கனமழை
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் மழை செம போடு போடுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் மணிமுத்தாறில் 29 செ.மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. இதே போன்று பாபநாசத்தில் 22 செ.மீட்டர், திருச்செந்தூரில் 11 செ.மீட்டர் என பரவலாக நல்ல கனமழை பெய்துள்ளது.

அணைகள் நிலவரம்
நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் அணைகளில் நீர் நிரம்பி வருகிறது. நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் :
பாபநாசம்: உச்சநீர்மட்டம் : 143அடி, நீர் இருப்பு : 105.6 அடி, நீர் வரத்து : 4748.26 கன அடி,வெளியேற்றம் : 604.75 கன அடி.
சேர்வலாறு அணை : உச்ச நீர்மட்டம்: 156 அடி, நீர் இருப்பு : 112.01 அடி,
மணிமுத்தாறு : உச்ச நீர்மட்டம்: 118 அடி, நீர் இருப்பு : 89.40 அடி, நீர் வரத்து : 2877 கன அடியாக உள்ளது.

கனமழை பதிவு
கனமழை அளவு: பாபநாசம்: 160 மி.மீ, சேர்வலாறு : 60 மி.மீ, மணிமுத்தாறு: 286 மி.மீ, கடனா: 27 மி.மீ, ராமா நதி: 30 மி.மீ , கருப்பா நதி:
8 மி.மீ, குண்டாறு: 31 மி.மீ, நம்பியாறு: 125 மி.மீ, கொடுமுடி: 50 மி.மீ, அடவிநயினார்: 7 மி.மீ, அம்பாசமுத்திரம்: 31 மி.மீ, ஆய்குடி: 10.4 மி.மீ,
சேரன்மகாதேவி: 60 மி.மீ, கல்லிடைக்குறிச்சி: 85.8 மி.மீ, நாங்குநேரி: 57 மி.மீ, பாளையங்கோட்டை:11.2 மி.மீ, ராதாபுரம்: 40 மி.மீ, செங்கோட்டை:40 மி.மீ, சிவகிரி: 9 மி.மீ, தென்காசி: 22 மி.மீட்டரும் பதிவாகியுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications