மனைவி இருப்பதை மறைத்து திருநங்கையை திருமணம் செய்த எஸ்.ஐ.க்கு சிக்கல்
திருநெல்வேலி: மனைவி இருப்பதை மறைத்து தன்னை திருமணம் செய்து குடும்பம் நடத்திய எஸ்.ஐ. இப்போது தன்னை ஏற்க மறுப்பதாக திருநங்கை ஒருவர் திருநெல்வேலி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளளார். இதனால் அந்த எஸ்.ஐ.க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே ராமச்சந்திராப் பட்டிணத்தைச் சேர்ந்தவர் திருநங்கை பபிதா ரோஸ்.
இவர் "ரோஸ்" டிரஸ்ட் என்ற நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் திருநங்கைகளுக்கு ஆதரவாக பல சேவைகளையும் செய்து வந்தார்.

ஏமாற்றி திருமணம்
இவர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அந்த மனுவில் அம்பாசமுத்திரம் காவல்நிலைய எஸ்.ஐ. விஜய சண்முகநாதன், தனக்கு மனைவி இருப்பதை மறைத்து என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு என்னுடன் குடும்பம் நடத்தினார்.

டிஎஸ்பி விசாரணை
இதன் மூலம் என்னிடம் பணம், நகைகளை அபகரித்துக்கொண்டார். இப்போது என்னுடன் சேர்ந்த வாழாமல் மறுக்கிறார் என புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரிக்குமாறு எஸ்பி அருண் சக்தி, தாழையூத்து டி.எஸ்.பி.பொன்னரசுக்கு உத்தரவிட்டார்.அவர் இந்த வழக்கினை தற்போது விசாரித்து வருகிறார்.

திருமணம் எப்படி?
முன்னதாக திருநங்கை பபிதா ரோஸ் தனது வீட்டில் யாரோ மர்மநபர்கள் கல்வீசி தாக்குவதாக பாவூர் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்திருக்கிறார். அப்பொழுது அங்கு எஸ்.ஐயாக இருந்தவர் விஜய சண்முகநாதன். இந்தப் புகார் சம்பந்தமாக அடிக்கடி பபிதா ரோஸை சந்தித்து பேசி உள்ளார். நாளடைவில், இருவருக்கும் பழக்கம் உண்டாகியதாம். பின்னர் இப்பழக்கம் இருவருக்கிடையே திருமணம் வரை சென்றதாக கூறப்படுகிறது.

கைவிட்ட எஸ்ஐ
எஸ்ஐ விஜய சண்முகநாதன், தனக்கு . மனைவி குழந்தைகள் இருப்பதை மறைத்து திருநங்கை பபிதா ரோஸை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இரண்டு வருடங்களாக நீடித்த திருமண உறவு எஸ்.ஐ.குடும்பத்தாருக்கு தெரிய வர, அவர்கள் கண்டித்தனராம். இதனால் திருநங்கை பபிதா ரோஸை சந்திப்பதை விஜய் சண்முகநாதன் முற்றிலும்புறக்கணித்தாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே திருநங்கை ரோஸ் தற்பொழுது மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார் என்கிறார்கள் அவருக்கு தெரிந்தவர்கள்.இந்நிலையில் திருநங்கை பபிதா ரோஸ் அளித்த புகார் காரணமாக எஸ் ஐ விஜய் சண்முகநாதனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications