Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாங்க பாக்காத அட்டாக்கா? சாட்சி கையெழுத்திட அணுகவும் மார்க்சிஸ்ட் கட்சியை! மாவட்ட செயலாளர் நச் பதில்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்ட அலுவலகம் சூறையாடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், "சாதி மறுப்பு திருமணங்களுக்கு சிபிஎம் அலுவலகம் எப்போதும் திறந்திருக்கும்" என அக்கட்சி கூறியிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, நம்பிக்கை நகரைச் சேர்ந்த மதன் குமார் (வயது 28) என்பவரும், பாளையங்கோட்டை பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதய தாட்சாயினி (வயது 23) என்பவரும் கடந்த 6 வருடமாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், ஜூன் 13ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அடுத்த நாள் (ஜூன் 14) மேலப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்ய முன்பதிவு செய்திருந்தனர்.

CPM Marxist Communist Party Tirunelveli

இதனை பெண் வீட்டார் தரப்பில் தடுத்த நிலையில், பாதுகாப்பு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அணுகியுள்ளனர். காவல்துறை அனுமதியோடு திருமணத்தை பதிவு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொண்ட நிலையில் பந்தல்ராஜா மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட 25 பேர் கொண்ட கும்பல் திருநெல்வேலி, வினோபா நகரில் உள்ள கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திற்குள் நுழைந்து மேஜை, நாற்காலி, கண்ணாடி, கதவு, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

தாக்குதலைத் தடுக்க முயன்ற கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் 2 பேர் உட்பட மூன்று பேரை தாக்கியுள்ளனர். காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் சிலரைப் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் திருநெல்வேலி மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாதி மறுப்பு திருமணத்தை செய்து வைத்தால் தாக்குவதா? என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவத்திருந்த சிபிஎம், “திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து சாதி ஆணவப் படுகொலை நடந்து வருவது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதன் தொடர்ச்சியாகவே காதல் தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தைத் தாக்கி ஊழியர்களை காயப்படுத்தியுள்ளார்கள்.

இச்சம்பவத்தை தமிழக காவல்துறை அலட்சியப்படுத்தாமல் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் - சம்பந்தப்பட்ட காதல் தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அழுத்தமாக வற்புறுத்துகிறது" என சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், சாதி மறுப்பு திருமணங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் எப்போதும் திறந்திருக்கும் என அக்கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் தெரிவித்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+